செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

துப்பாக்கி முனை மூலம் அப்பாவுடன் மல்லுக்கு நிற்கும் விக்ரம் பிரபு..!

 

கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை… உலகெங்கும் டிசம்பர் 14 ம் தேதி வெளியாகிறது!

கலைப்புலி தாணுவின் வி கிரியேசன்ஸ் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பாக்கி முனை படம் வரும் டிசம்பர் 14-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

பக்கா ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள துப்பாக்கி முனையின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

துப்பாக்கி முனை படத்துக்கு தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

படத்தில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.

 

பிரபு – பிரஷாந்த் நடித்துள்ள படம் ஜானி. இந்த படமும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
மகன் விக்ரம்பிரபு நடித்த துப்பாக்கி முனை படமும் அதே தினத்தன்று ரிலீஸ் ஆகிறது
முதல் முறையாக மகனுடன் நேருக்கு நேர் மோதுகிறார் பிரபு.
துப்பாக்கி முனை மூலம் அப்பா பிரபுவை எதிர் கொள்கிறார் விகரம்பிரபு.

341 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன