அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்ததையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கருணாநிதியின் சிலை வடிவமைக்கப்பட்டு, அண்ணா அறிவாலயத்தில் அந்த சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
அந்த சிலையை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்துள்ளார். அந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உடனிருந்தனர்.
அந்த விழாவை முடித்துக் கொண்டு நேரடியாக மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற சோனியா காந்தி, அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த சிலை திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலக பிரபலங்கள் சத்ருகன்சின்ஹா, பிரபு, வடிவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்