எப்பவும் உண்மை சம்பவங்களுக்கு பலம் அதிகமா இருக்கும் வலி அதிகமா இருக்கும்னு சொல்லுவாங்க... அது சரிதான்னு நிரூபிச்ச படம்தான் சூர்யாவின் சூரரைப் போற்று.
வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த விமான பயணத்தை சாமானியனும் அனுபவிக்க முடியும் என போராடி வெற்றி பெற்றவர் கேப்டன் கோபிநாத்.
இவர் தொடங்கிய ஏர் டெக்கான் விமான நிறுவனம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது.
அவரின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை அவர் பட்ட கஷ்டங்களை மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
சூர்யாவின் நடிப்பைவிட அபர்ணா பாலமுரளி அத்தனை அம்சம். நெருக்கமான காட்சிகளில்... பிரமாதம் போங்க... எங்கம்மா இருந்த... நல்ல இயக்குனர்கள் படங்களில் இனி அடிக்கடி அபர்ணா பாலமுரளியை பார்க்க முடியும்.
சூர்யாவுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஸ்கிரிப்... சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படும் போது மொட...
மொக்கையான படங்களின் ராஜ தர்பாரான அமேசான் பிரைம் OTT தளத்தில் "புத்தம் புது காலை" என்ற பெயரில் ஐந்து குறும்படங்களின் தொகுப்பு சினிமான்னு ரிலீஸ் ஆகியிருக்கிறது.
கொரோனா ஊரடங்கின் பின்னணியில் ஏதாவது புதுசா சொல்லலாமேன்னு முயற்சி எடுத்தாங்களாம்... ஆனால் ஐய்யோ பாவம் பார்வையாளர்கள்... நல்ல வேளை இது தியேட்டரில் வரல... இவ்ளோ கஷ்ட நேரத்துல காசு குடுத்து நம்பிக்கையா தியேட்டருக்கு ரசிகன் போயிருந்தா ஐய்யோ பாவம்...
சரி... இந்த குறும்படங்கள் என்னதான் சொல்லுது பாக்கலாம்...
முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இரண்டு பேருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் போல ஒரு அலப்பறை... நல்லவேளை அதைக் காட்ட ஒரு இளம் ஜோடிய மேட்ச் பன்னியிருப்பது. இதை காதல்னு சொல்றதா கள்ளக்கா...
அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி, கவின், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், டேனி என்ற நாய் இன்னும் சிலர் நடித்திருக்கும் படம் ‘டேனி’. ஒடிடி தளமான ZEE5-ல் ரிலீஸ் ஆகியுள்ளது.
போலீஸ் கிரைம் படங்கள் பெரும்பாலும் நகரங்களில் மட்டுமே படம் பிடிக்கப்படும் . ஆனால் டேனி அதில் வித்தியாசம் காட்ட
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவமாக வைக்கிறார்கள்.
ஒருகிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக வரும் வரலட்சுமியின் தங்கையும் எரித்துக் கொல்லப்பட இந்த கொலைகளின் பின்னணி மற்றும் கொலையாளி யார்? என்பதை வரலட்சுமி எப்படி கண்டுபிடிக்கிறார், அவருக்கு ‘டேனி’ என்ற போலீஸ் நாய் எப்படி உதவி செய்கிறது, என்பது தான் படத்தின் கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வ...
தாமதமாக வரும் நீதியும் அநீதிதான் என்று ஒற்றை வரியை மிகுந்த வலியோடு உணர்வு ரீதியாக சொல்லி இருக்கிற படம் தான் ஜோதிகா நடிப்பில் டிஜிட்டலில் வெளியான பொன்மகள் வந்தாள்.
இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் திடீர் திடீரென பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை இருவர் தடுக்க வருகிறார்கள். அவர்களை அந்த பெண் சுட்டுக்கொலை செய்கிறார். அந்த கொலையாளியை பிடிக்கும் போது போலீசார் அந்த பெண்ணை என்கவுண்டர் செய்கிறார்கள். அதோடு அந்த வழக்கு முடிக்கப்படுகிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட அந்த என்கவுண்டர் வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார் வக்கீல் வெண்பாவான ஜோதிகா. அவருக்கு உதவியாக பாக்யராஜ்.
அதில் அவர் வெற்றி பெற்றாரா...? என்கவுண்டர் செய்யப்பட்ட பெண் யார்? அந்த பெண்ணால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆட்கள் யார்? பாக்யராஜுக்கு வெண்பா யார்...
ரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு - கோடங்கி விமர்சனம்
வரிசையா திருட்டு நடக்கும் அதை கண்டுபிடிச்சி தப்ப தட்டிக்கேப்பார் ஹீரோ... இப்படித்தான் பல கதைகள் பாத்திருப்போம்.
ராஜ்தீப் இயக்கி இருக்குற அசுரகுரு படத்துல ஹீரோ விக்ரம்பிரபுவே பெரிய திருடன்.
ஸ்மார்ட்டா திட்டம் போட்டு திருடுவார். அப்படி திருடுன பண்த்தை என்ன பன்றார்... கதாநாயகி மஹிமா ஒரு டிடெக்டிவ்... அவங்களும் திருடன தேடுவாங்க... திருடன் சிக்குனானா இல்லியான்னு கிளைமாக்ஸ்ல சொல்றாங்க.
வானம் கொட்டட்டும் படத்துக்கு பிறகு விக்ரம்பிரபு ரொமப எதிர்பார்த்த படம் இது. ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கார்.
அதே மாதிரி மஹிமா நல்ல கதாபாத்திரம். ஸ்மார்ட்டா அழகா நடிச்சிருக்காங்க.
யோகிபாபு காமெடி பெருசா ஒர்க் அவுட் ஆகல. இன்னும் திரைக்கதையில கவனம் செலுத்தி இருந்தால் அசுரகுரு அசத்தலா இருந்திருக்கும்....
காஷ்மீர் போரில் பெற்றவர்களை பறி கொடுத்து அனாதையாக நிற்கும் ஜிப்ஸியை திருவிழாக்களில் குதிரை வைத்து வேடிக்கை காட்டும் ஒருவர் வளர்க்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் இறந்து போக குதிரையோடு நாடோடியாக ஊர் ஊராக போகிறார். பாட்டுப்பாடுகிறார்.
அப்படி குதிரைக்கார தெருப்பாடகனாக மாறிய ஜிப்ஸி நாகூர் வருகிறார். அங்கே இஸ்லாமிய மத கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்து பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணுக்கு விடிந்தால் திருமணம் என்ற சூழலில் அந்த பெண்ணோடு ஊரைவிட்டே ஓடி வேறொரு ஊரில் இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்கிறார் ஜிப்ஸி.
மனைவி கர்ப்பிணி ஆக இருக்கும் போது அந்த ஊரில் மதக்கலவரம் ஏற்படுகிறது. அதில் மனைவியை பிரியும் ஜிப்ஸியை போலீஸ் பிடித்து செல்கிறது. கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா இதுதான் ஜிப்ஸி கதை.
புரட்சிகரமான தெருப்பாடகன் என்று ஜிப்ஸியான ஜீவாவை அடையாளம் காட்டும் இயக்க...