இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘செக்ஸி துர்கா’ படத்தை திரையிட கோர்ட் உத்தரவு
கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படாமல் 'செக்ஸி துர்கா' படம் தடுக்கப்பட்டது மலையாள திரையுலகில் சர்ச்சைக்கு உள்ளானது. சணல் குமார் சசிதரன் இயக்கிய 'செக்ஸி துர்கா', மற்றும் 'நியூட்' ஆகிய இரு படங்கள் IFFI திரையிடலில் இருந்து நிறுத்தப்பட்ட்ன.
திரைப்பட விழாக்களுக்கு படங்களை அனுப்பி விருதுகளை அள்ளும் மலையாள இயக்குனர்களில் ஒருவர் தான் சணல் குமார் சசிதரன். இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு 'செக்ஸி துர்கா' என டைட்டில் வைத்துள்ளார்.
இந்தப் படத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பால் 'எஸ்.துர்கா' என சென்சார் போர்டு வழிமுறைகளின்படி டைட்டில் மாற்றப்பட்டது. இந்தப் படத்தை கோவா திரைப்பட விழாவில் அனுமதிக்காததால் வழக்கு தொடர்ந்தார் இயக்குநர் சணல் குமார் சசிதரன்.
எனது படத்தின் துர்கா கேரக்டர் மதம் சார்ந்து எந்தப் பிரச்னைகளையும் கிளப்பாது. நீங்கள் எஸ். துர்கா, ஏ.துர்கா, பி.துர்கா என என்ன பெயரில் ...