நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது. 41 நாட்கள் பயணம் செய்த சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதை இஸ்ரோ நேரலை செய்தது.
இதனை பார்த்த ஒட்டு மொத்த இந்தியர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதன்மூலம் நிலவில் தடம் பதித்த 4வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியா, சூரிய ஒளியே படர்த நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் சொந்தமாக்கியது.
விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தரையிறங்கியதற்கு பிற...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது....
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கொச்சியில் ஜெயின் கல்லூரி வளாகத்தில் 'கோப்ரா' குழுவினர், மாணவ, மாணவிகளை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது விக்ரம் பேசியதாவது, ''உங்களுக்கு 'அந்நியன்' படம் பிடிக்கும் என்றால் இ...
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றனர்.
அவர்களை வரவேற்க ரசிகர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை பார்த்த ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
பலர் முண்டியடித்துக் கொண்டு அவருக்கு முன்பாக நின்று செல்பி எடுக்க முயன்றனர்.
பாதுகாப்பு கருதி போலீசாரும் விக்ரமை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். அப்போது அங்...
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்".
இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் "பொன்னி நதி" அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பின்னர் இப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், அறிவித்தபடி "பொன்னியின் செல்வன்" படத்தின் இரண்டாம் பாடலான சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முத...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
விக்ரம் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார்.
அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை கமல் பரிசளித்தார்.
ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்தார்.
இதையடுத்து 'விக்ரம்' படம் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது நிருபர் ஒருவர் கமல் சார், லோகேஷுக்கு காரும், சூர்யாவுக்கு வாட்ச்சும் பரிசளித்தார் உங்களுக்கு என்ன கொடு...
ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது.
இதில் திரையுலக முன்னணி பிரபலங்களான கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
கமலின்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் இப்படத்தை தயாரித்துள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைபெற்று வருகிறது.
இதையடுத்து 'விக்ரம்' படம் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தின் மூலம் பதில்களை அளித்தார்.
அதில் ரசிகர் ஒருவர் 'கைதி திரைப்படத்தில் இறந்த அர்ஜுன் தாஸ் கதாப்பாத்திரம் விக்ரமி படத்தில் எப்படி உயிருடன் இருக்கிறார்? இதை நம்ப முடியவில்லை' என கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த லோகேஷ், 'கைதி ...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே, ரோலேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்த சூர்யா டுவிட்டர் பதிவானது தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது.
இதை சாத்தியப்பட...
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.
அந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற படலானது கடந்த 11 ஆம் தேதி இரவு வெளியானது.
இந்தபாடலில், மத்திய அரசை விமர்சித்து வரிகள் உள்ளதாகவும், சாதி ரீதியான பிரச்சினைகளை தூண்டும் வகையிலும் வரிகள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
எனினும் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், தற்போது இந்த பாடல் இரண்டே நாளில் 2 கோடி பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
பாடல் வெளியானதிலிருந்து தற்போது வரை இப்பாடல் யூடியூப்பில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது....