ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

HOME SLIDER

நான் கண்டிப்பாக முதல்வர் ஆவேன் “ASK” மொபைல் செயலி  வெளியிட்டு சரத்குமார் நம்பிக்கை

நான் கண்டிப்பாக முதல்வர் ஆவேன் “ASK” மொபைல் செயலி வெளியிட்டு சரத்குமார் நம்பிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  திரைப்பட நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது ‘ஆஸ்க்’ (ASK) எனப் பெயரிடப்பட்ட மொபைல் செயலியை வெளியிட்டார். அன்றாட சமூகப் பிரச்னைகளைப் பேசி, பகிர்ந்து, மேலும் குறை தீர்த்துக்கொள்ள சரத்குமாருக்கும் மக்களுக்கும் ஓர் இடை-ஊடகமாக இந்த மொபைல் செயலி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலி ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் உபயோகிக்கக்கூடிய வசதியுடையதாய் அமைக்கபட்டிருக்கிறது. பிரதமரின் நிதி ஆலோசகராக இருந்து ஓய்வுபெற்ற நாராயணன், டாக்டர் அசோக் பாலசுப்பிரமணியன், ராதிகா சரத்குமார், டாக்டர் வசுதா பிரகாஷ் ஆகியோரது முன்னிலையில் சரத்குமார் இந்தச் செயலியை வெளியிட்டார். இந்தச் செயலியை வெளியிட்டு தொடர்ந்து சரத்குமார் பேசியதாவது, "மக்களுக்குப் பணி செய்ய இன்று வேகமாய் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினே...
விஜய் சேதுபதியின் 8 கெட்டப்பு…  ஏகப்பட்ட வலி ‘ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்’..!

விஜய் சேதுபதியின் 8 கெட்டப்பு… ஏகப்பட்ட வலி ‘ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
யதார்த்தமான நடிப்பால் சிக்ஸர் அடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானது. இந்தப் படத்தில் எமன் என்ற பெயரில் நடித்து வரும் விஜய் சேதுபதி, படத்துக்காக நிறைய கெட்டப் போட்டிருக்கிறார்.   https://youtu.be/Ta3Yruzx_lA விஜய் சேதுபதி நிறைய மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் அவருக்கு நிறைய கெட்டப்புகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட எட்டு கெட்டப்புக்கு மேல் நடித்திருக்கிறார். மேக்கப் போட ஆரம்பித்துவிட்டால் அந்த கெட்டப்பின் ஷூட் முடிக்கிற வரைக்கும் மேக்கப்பை கொஞ்சம்கூட அவர் கலைக்க மாட்டார். கெட்டப்புக்கு ஏற்றவாறு முடி அலங்காரம் செய்யும்போது அவருக்கு ரொம்ப வலியாக இருக்கும். நீண்ட முடியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும்போது அது மிகவும் வலிக்கும். ஆனால், அதையெல்லாம் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் விஜ...
வடசென்னை மக்களை கௌரவித்த ‘வாண்டு’ இயக்குநர் வாசன் ஷாஜி 

வடசென்னை மக்களை கௌரவித்த ‘வாண்டு’ இயக்குநர் வாசன் ஷாஜி 

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், முன்னோட்டம்
வடசென்னை மக்களை கௌரவித்த 'வாண்டு' இயக்குநர் வாசன் ஷாஜி எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி,டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் "வாண்டு", புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, தடயறத்தாக்க வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில், ரமேஷ் & V.மகேந்திரன் ஒளிப்பதிவில், A .R.நேசன் இசையில், பிரியன் படத்தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜன் வரிகளில், உருவாகி இருக்கு படம் வாண்டு  இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னை சாலிக்ராமம்த்தில் உள்ள பிரசாத் பிரிவியூ ததிரையரங்கில் மிக பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர், இயக்குனருமான சமுத்திரகனி மற்றும் காமெடி நடிகர், தயாரிப்பாளருமான கஞ்சா கருப்பு கலந்து கொண்டனர். இதில் சமுத்திரகனி பேசுகையில் சினிமா பின்னணி இல்லாமல் ஒர...
பொங்கல் ரிலீசாக  விறுவிறுப்பாக தயாராகும் விக்ரம்  ‘ஸ்கெட்ச்’

பொங்கல் ரிலீசாக விறுவிறுப்பாக தயாராகும் விக்ரம் ‘ஸ்கெட்ச்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
  கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். விஜயசந்தர் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் ‘டப்பிங்’ பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறத...
சூடுபிடித்த  சூர்யா – கீர்த்தி சுரேஷ் ஜோடியின்  `தானா சேர்ந்த கூட்டம்’  பட வியாபாரம்..!

சூடுபிடித்த சூர்யா – கீர்த்தி சுரேஷ் ஜோடியின் `தானா சேர்ந்த கூட்டம்’ பட வியாபாரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியருந்தது. அதேபோல் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படத...
துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்று  வாழ்த்து தெரிவித்தார். கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் தொல் திருமாவளவன், ஜி கே வாசன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆசிகளை மணமக்களுக்கு வழங்கினர். திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டதால...
இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் பட்டியலில் நடிகை காவ்யா மாதவன் இடம்பிடித்தார்..!

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் பட்டியலில் நடிகை காவ்யா மாதவன் இடம்பிடித்தார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் பட்டியலில் மலையாள நடிகை காவ்யா மாதவன் இடம்பிடித்து உள்ளார். ‘யாஹூ’ வெளியிட்ட 2017 ஆம் ஆண்டுக்கான, இணையத் தளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளின் பத்துப் பேர் கொண்ட பட்டியலை வெளியிட் டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகை காவ்யா மட்டும்தான்.   தென்னிந்திய நடிகைகளில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா வுக்கும் அனுஷ்காவுக்கும் கிடைக் காத ஒரு கௌரவம் காவ்யவிற்கு கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக அதிக அளவிலான படங்களிலோ, வெற்றிப் படங்களிலோ நடிக்காமல் இருக்கும் மலையாள நடிகை காவ்யா மாதவனை அதிகம் இணையத்தில் தேடியதற்குக் கார ணமும் கூறப்படுகிறது. பாவனா கடத்தல், பாலியல் கொடுமை வழக்கிலும் காவ்யா மாதவன் பெயர் அதிகம் சிக்கியது. காவ்யா மாதவன் சொல்லித்தான் பாவனாவை கடத்தியதாக கைது செய்யப்பட்டவர் கூறியதாகவும் செய்திகள் வெளியானது. கா...
ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள்..!

ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜெய் நடித்து ஆண்டுக் கணக்கில் தயாரிப்பில் இருக்கும் ‘பலூன்’ படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந் தப் படத்தைத் தொடர்ந்து ‘பார்ட்டி’ படத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படத்திலும் நடித்து முடித்துள்ள ஜெய், அடுத்து சுரேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெய்யுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக ராய் லட்சுமி ஒப்பந்தமாகியிருக் கிறார். இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் மற்றொரு கதாநாயகியாக கேத்ரின் தெரெசாவும் நடிக்க இருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்குகிறது....
ராமர் பாலம் புராணக்கதையா? கட்டப்பட்டதா? விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருதா அமெரிக்கா டிவி..!?

ராமர் பாலம் புராணக்கதையா? கட்டப்பட்டதா? விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருதா அமெரிக்கா டிவி..!?

HOME SLIDER, politics, செய்திகள்
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் இருந்து இலங்கையின் மன்னார் வளைகுடா வரையில் சுண்ணாம்புக் கற்களாலான மேடான பகுதி செல்கிறது. இது இயற்கையாக உருவானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், புராணத்தின்படி சீதையை மீட்க ராமர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் நம்புகின்றனர். ‘ஐஸ் ஏஜ்’ காலத்தில் இந்தப் பாலம் இயற்கையாக உருவானது என்று புவியியல் ஆதாரங்கள் கூறுவதாக என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா கூறி உள்ளது. இதற்கிடையே இவ்வழியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்ட  மத்திய அரசின் சேது சமுத்திர திட்டம் பெரும் விவாதப்பொருளாகியது. தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம், சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையை சுற்ற வேண்டியதும் இல்லை. இந்த திட்டம் மத்தியில் அமைந்...
சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகே சுருட்டு வடிவ விண்கல் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்

சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகே சுருட்டு வடிவ விண்கல் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன.  பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பூமியை போன்ற உயிர்வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களும் அதில் உயிர்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வான்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இதுவரை கிட...