“விஷால் பட்ட கஷ்டங்கள் வெளியே தெரியாமல் போய்விட கூடாது” ; மதகஜராஜா ரிலீஸ் குறித்து சுந்தர்.சி நெகிழ்ச்சி
பொங்கலுக்கு படம் வெளியாவதை தொடர்ந்து மதகஜராஜா படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த படம் வெளியாவது குறித்த மகிழ்ச்சியையும் இந்த படம் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது,
“மதகஜராஜா படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பேன் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஒரு இயக்குனராக அவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராமல் ஆரம்பித்த ஒரு சந்தோஷமான நிகழ்வு இது. சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு 12 மணி அளவில் திருப்பூர் சுப்பிரமணியம் எனக்கு போன் செய்தார். இந்நேரத்தில் அழைக்கிறாரே என நினைத்தால் மதகஜராஜா படத்தை பார்க்க தயாரிப்பாளர் அழைத்தார், பல வருடங்கள் ஆகிவிட்டதால் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்தபடி பார்க்க சென்றால் படம் சூப்பராக இருப்பதாகவும் கூறி படத்தைப் பற்றி அரை மணி நேரம் ரசித்து பேசினார். இந்த முப்பது வருடங்களில் என்னிடம் ...









