அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு
மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் தங்கள் மகன். அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது எங்கள் பாராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை தாக்கல் செய்தார். இதனை ஆராயந்த நீதிமன்றம் கதிரேசன் வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்தது போலி சான்றிதழ் என்று கூறி கதிரேசன், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கதிரேசன் போலி என்று கூறும் சான்றிதழ்களின் அசலை நீதிமன்றத்தில் தாக்கல் செய் தனுஷிற்கு உத்தரவிட்டு, வழக்கை வருகிற டிசம்பர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.