வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

REVIEWS

உறியடி 2 விமர்சனம்

உறியடி 2 விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
தென்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று எந்தவித பராமரிப்பு பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரிவர செய்யப்படாமலேயே இயங்கி வருகிறது. கெமிக்கல் இஞ்சினியரிங் படித்து விட்டு, இந்த ஆலையில் வேலைக்குச் சேர்கிறார்கள் நண்பர்களான விஜய்குமார், சுதாகர் மற்றும் அப்பாஸ் மூவரும். இந்த ஆலையில் அபாயகராமான வாயு ஒன்று உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வாயுவின் விபத்தில் அப்பாஸ் உயிரிழக்கிறார். ஒரு கட்டத்தில் ஊருக்கே அது பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு செல்கிறது. இந்த ஆலை முதலாளியோ உள்ளூர் ஆளுங்கட்சி அரசியல்வாதியையும் அந்தப் பகுதியில் ஜாதி அரசியல் செய்யும் அரசியல்வாதியையும் கைக்குள் போட்டுக்கொண்டு பிரச்சனைகளை அமுக்க பார்க்கிறார். ஆனால் இளைஞர்களை ஒன்று திரட்டி இந்த உண்மையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த துடிக்கிறார் விஜய் குமார்.. இவரின் முயற்சி வெற்றி பெற்றதா..?? இல்லைய...
நட்பே துணை – விமர்சனம்

நட்பே துணை – விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
பிரான்ஸ்க்கு செல்ல காத்திருக்கும் பாண்டிச்சேரி மாணவன் நமது நாயகன் ஹிப் ஹாப் ஆதி. பாண்டிச்சேரியில் காதலி அனாகாவை பார்த்ததும் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது நாயகனுக்கு. காரைக்காலில் உள்ள தனது மாமா வீட்டிற்கு செல்லும் ஹிப் ஹாப் ஆதி மீண்டும் நாயகி அனகாவை சந்திக்க, அவர் மீது காதலில் விழுகிறார். ஹாக்கி வீரராக வரும் நாயகி அனாகாவிற்கு ஹாக்கி செலக்‌ஷனில் பிரச்சனை ஏற்பட, அவருக்கு உதவ முன்வருகிறார் ஆதி. இவருடைய விளையாட்டை கண்டு அனைவரும் வியக்கின்றனர். அதற்கு பிறகு தான் தெரிகிறது ஆதி U19ல் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் கேப்டனாக இருந்தவர் என்று… காரைக்காலில் பல போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹாக்கி கிரவுண்ட் ஒன்றிற்கு ஹரோஷ் உத்தமன் பயிற்சியாளராக இருக்கிறார். பல நாடுகள் ஒதுக்கிய மருந்து கம்பெனி ஒன்றை பணத்திற்காக சென்னையில் உள்ள அந்த ஹாக்கி கிரவுண்ட் இடத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறார் தமிழக அ...
குப்பத்துராஜா விமர்சனம்

குப்பத்துராஜா விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
வியாசர்பாடி ஏரியாவில் சிறு சிறு குறும்புகளை செய்து கொண்டும், குடிகார பாசக்கார அப்பா எம் எஸ் பாஸ்கருக்கு நல்ல மகனாகவும், காதலிக்கு நல்ல காதலனாகவும், பார்த்திபனை தன் வில்லன் என்று நினைத்துக் கொண்டும் வரும் கதாபாத்திரம் தான் நம்ம ராக்கெட்(ஜி வி பிரகாஷ்). எம் ஜி ராஜேந்திரன்(எம் ஜி ஆர்) என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் பார்த்திபன். எம் ஜி ஆர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் குழந்தையின் காது குத்து விழாவில் ஆரம்பித்து அந்த ஏரியாவில் நல்லது கெட்டது என அனைத்திற்கும் உதவி செய்பவர் பார்த்திபன். காதல், கலாட்டா என ராக்கெட் வாழ்க்கை நகர, ஒருநாள் அவர்கள் ஏரியாவில் கலகலவென சுற்றித்திரிந்த பள்ளி சிறுவன் காணாமல் போகிறான், அதிலிருந்து சில நாட்களில் எம் எஸ் பாஸ்கர் கொலை செய்யப்படுகிறார். தனது அப்பாவை இழந்து, செய்வதறியாது கலங்கி நிற்கிறார் ஜி வி பிரகாஷ். தனது அப்பாவை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க கிளம்புகிறா...
வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ் – கோடங்கி விமர்சனம்

வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  தலைக்கனம் பிடித்த இயக்குனரின் வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ்... காமத்தையும் ஆபாச வார்த்தைகளையும் கலந்து விட்டால் சினிமாவில் ஜெயித்தது விடலாம் என்று எந்த மடையன் சொல்லிக் கொடுத்தானோ தமிழ் சினிமாவின் சாபக்கேடு விஜய்சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ். விஜய்சேதுபதி திருநங்கை ஷில்பாவாக அரை மணி நேரத்திற்கு வருகிறார். பாவம் திருநங்கைகள் என சொல்லும் அளவுக்கு அத்தனை பாவமான காட்சிகள். அருவருப்பான காட்சிகள். ஆபாசமான சித்தரிப்பு.இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவின் மட்டமான சிந்தனை காட்சிக்கு காட்சி. சமந்தா நடித்த கதாபாத்திரம் மிக மிக கேவலமான காட்சியமைப்பு. ஆபாசத்தின் உச்சம். சரி கதை என்ன அப்படின்னு பாத்தா... சமந்தா - பஹத் பாசில் ஜோடி விருப்பம் இல்லாத புருஷன் பொண்டாட்டி. புருஷன் இல்லாத போது முன்னாள் கல்லூரி காதலனை வீட்டுக்கு வரச் சொல்லி தகாத உறவு வைத்துக் கொள்ளும...
ஐரா – கோடங்கி விமர்சனம்

ஐரா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  நயன்தாரா முதல் முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம்தான் ‘ஐரா’. மா, லட்சுமி என்ற இரு குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். யமுனா என்ற கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா, மீடியாவில் பணிபுரிகிறார். வீட்டில் திருமண பேச்சு எடுப்பதால், கோபித்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து விடுகிறார் யமுனா. அங்கு ஒரு வண்ணத்துப்பூச்சி அமானுஷ்யமாக யமுனாவை வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் கலையரசன் சந்திக்கும் சிலர் மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்கின்றனர். மர்மமான முறையில் இறப்பவர்களை கொல்வது இறந்து போன பவானி(மற்றொரு நயன்தாரா)தான் என்று கண்டுகொள்கிறார் கலையரசன். யமுனாவையும் பவானி கொல்ல நினைக்கிறார். எதற்காக யமுனாவை பவானி கொல்ல நினைக்கிறார்..?? மற்ற நபர்களை பவானி ஏன் கொன்றார்..?? கலையரசனுக்கு பவானிக்கும் என்...
உச்சகட்டம் விமர்சனம்

உச்சகட்டம் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
அனூப் சிங் மற்றும் தன்ஷிகா இருவரும் காதலர்கள். நியூ இயர் கொண்டாட்டத்திற்காக தனியார் விடுதிக்கு செல்கின்றனர். அங்கு, ஒரு நபரை கும்பல் ஒன்று கொலை செய்துவிட, இந்த கொலையை தன்ஷிகா தனது மொபைலில் வீடியோ எடுத்து விடுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தன்ஷிகாவை கொலை செய்ய துரத்துகிறார். தன்ஷிகாவை தேடி அனூப் சிங் அலைகிறார். இறுதியாக அந்த ரெளடி கும்பலிடம் இருந்து தன்ஷிகாவை அனூப் சிங் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்திருந்த அனூப் சிங், இப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார். நல்ல உடற்கட்டோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்கிறார் அனூப். சாய் தன்ஷிகா, ரெளடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும், கார் டிக்கியில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். இரண்டாவது நாயகி தன்யா ஹோப் தனது அழகில் அனைவரையும் கட்டிப...
எம்பிரான் விமர்சனம்

எம்பிரான் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
நாயகன் ரெஜித் மேனன்(பிரியன்) ஒரு டாக்டர். தனது தாத்தா சந்திரமெளலியோடு வளர்ந்து வருகிறார் நாயகி ராதிகா ப்ரீத்தி(ஜெயா). ரெஜித் மேனனை ஒரு தலையாக காதலிக்கிறார் நாயகி ராதிகா. அவரை சந்தித்து காதலை வெளிப்படுத்தும் நேரத்தில் விபத்தில் சிக்கிக் கொள்கிறார் நாயகியும் அவரது தாத்தா சந்திரமெளலியும். சந்திரமெளலி சம்பவ இடத்தில் இறந்துவிட, கோமா நிலைக்கு சென்று விடுகிறார் நாயகி. பின், ராதிகாவிற்கு கோமா நிலை சரியானது..?? ராதிகாவின் காதல் ரெஜித் மேனனுக்கு தெரிந்ததா..?? காதல் கைகூடியதா..??? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. நாயகன் ரெஜித் மேனன், கதைக்கேற்ற சரியான பொருத்தம்தான். காட்சிக்கு காட்சி அழகு சேர்க்கிறார். சரியான கதை அமைந்தால் கோலிவுட்டில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார். படத்திற்கு மிகப்பெரிய பலமே நாயகி ராதிகா ப்ரீத்தி தான். அழகாக இருக்கிறார். அவருடைய கண்கள் கவிதைகள் பேசுகின்றன. கோவிவுட்டில் அடுத்த ...
ஜுலை காற்றில் விமர்சனம்

ஜுலை காற்றில் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS
நாயகன் ராஜீவ் (ஆனந்த் நாக்) ஒரு தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணி புரிகிறார். தனது நண்பன் திருமணத்திற்கு செல்லும் ராஜீவ், அங்கு வரும் நாயகி ஷ்ரேயா(அஞ்சு குரியன்)வை காண்கிறார். பார்த்ததும் நண்பர்களாகி விடுகின்றனர். பின், நட்பு காதலாக மாறாக, இருவரின் வீட்டு சம்மதத்தோடு திருமணம் வரை செல்கிறது. இருவருக்கும் நிச்சயம் முடிந்து விட்ட நிலையில், ராஜீவ் ஷ்ரேயாவுடன் ஒரு காதல் பிடித்தம் இல்லை என கூறி, திருமணத்தை நிறுத்தி விடுகிறார். ஷ்ரேயாவுன் பிரேக் அஃப் செய்து விடுகிறார். பின், அடுத்த நாயகி ரேவதி(சம்யுக்தா மேனன்)யை பார்த்ததும் ராஜீவிற்கு காதல் மலர்கிறது. ஏற்கனவே பிரேக் அஃப் ஆகி தனிமையில் இருக்கும் ரேவதிக்கு ராஜீவும் ஆறுதலாக இருக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. போட்டோகிராபியில் சாதனை புரிய நினைக்கும் ரேவதி, தனது வேலையில் மும்முரமாக இருக்கிறார். இதனால், இருவருக்கும் அவ்வப்போது ச...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS
பொன்வண்ணன்னோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை விட்டு பிரிகிறார் அவரது மனைவி. இவர்களுக்கு ஒரே மகன் கெளதம்(ஹரீஷ் கல்யாண்). தந்தை பொன்வண்ணனின் அரவணைப்பில் வளர்கிறார். தாய் வருவார் வருவார் என ஏங்கி ஏங்கி அவர் மீது வெறுப்படைகிறார் கெளதம். இதனால் ஒரு முரட்டு ஆளாகவே வளர்கிறார். எதற்கெடுத்தாலும் கோபம், அடி, என நண்பர்களோடு ஊர்சுற்றி வருகிறார். பெரிய இடத்து பெண்ணாக வருகிறார் தாரா(ஷில்பா மஞ்சுநாத்). மோதலில் ஆரம்பிக்கும் இருவரது சந்திப்பு பின் காதலில் இணைகிறது. கெளதமின் முரட்டுத்தனத்தால் அவ்வப்போது இருவருக்கும் சண்டை வருகிறது. வாழ்க்கை என்ற கட்டத்திற்குள் போகும் போது தாரா சில முக்கியமான முடிவுகள் எடுக்க நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.. இவர்களது காதல் ஜெயித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. கதையின் நாயகனாக ஹரீஷ் கல்யாண் பொருத்தமான தேர்வு தான். ஆக்‌ஷன் களத்திற்கு புதியவர் என்றாலும், ஏற்றுக் ...
நெடுநல்வாடை விமர்சனம்

நெடுநல்வாடை விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
சிங்கிலிபட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருபவர் செல்லையா (பூ ராம்). வீட்டை விட்டு ஓடிப் போன மகள் இரண்டு குழந்தைகளோடு மீண்டும் தனது அப்பாவை(பூ ராமை) நாடி வருகிறார். மகனின் எதிர்ப்பையும் மீறி தனது மகளையும் பேரப்பிள்ளைகள் இருவரையும் வீட்டிற்குள் தங்க வைக்கிறார் பூ ராம். எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் தாய் மாமன் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சொல்லி தனது பேரனை வளர்க்கிறார். படிப்பில், படு சுட்டியாக இருக்கும் நாயகன் இளங்கோவிற்கு நாயகி அஞ்சலி நாயர் மீது காதல். தாத்தா அறிவுரையின்படி தனது குடும்பத்திற்காக தனது காதலை தியாகம் செய்கிறார் இளங்கோ. ஒரு கட்டத்தில், காதலால் பல பிரச்சனைகள் ஏற்பட, இறுதியில் இளங்கோ வேலைக்காக வெளிநாடு சென்று விடுகிறார். பல வருடங்கள் வெளிநாட்டிலேயே தங்கி விடுகிறார். இளங்கோவின் காதல் ஜெயித்ததா..?? தனது இறுதி காலத்தில் பேரனை பூ ராம் கண்டாரா இல்...