நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ & கோடங்கி விமர்சனம்
கலகலப்பான அரசியல் நையாண்டி படம் பாக்கலாம்னு இப்ப யாரும் யோசிக்கிறதே இல்ல... ஏன்னா நிஜமாவே தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாமே தெனந்தெனம் பண்ற கூட்டணி கூத்துக்களை பாக்கும்போது இதைவிடவா ஒரு நையாண்டி படம் வேணும்னு தோணும்...
ரேடியோ ஜாக்கி பாலாஜி ஹீரோ வேஷம்போட்டு நடப்பு அரசியலை வரப்போற அரசியலை கட்சி பேதம் இல்லாம செக்குல போட்டு மாடு போட்டு ஆட்டி பிழிஞ்சி ஆயில் எடுக்க முயற்சி பண்ணியிருக்கார்...
பல நிஜக்கட்சிகளுக்கு ஆயில் தடவி ஆப்பும் ஏத்தியிருக்கார்... யார் யாருக்கு ஆயில் தடவின ஆப்பு... யாருக்கெல்லாம் டிரை ஆப்புன்னு படம் பாத்தா புரியும்...
எங்க ஊர் உங்க ஊர் கலாய்ப்பு இல்ல உலக மகா கலாய்ப்பு ஆர்.ஜே.பாலாஜியின் கலாய்ப்பு... ஆனா ஒரே ஒரு குறை... ஓவர் வாய்ஸ்... நடிப்பு பெருசா வரல... இந்...
‘கண்’ பூரா கண்ணீர்... கலை இல்லை... மானை காணோம் ‘கண்ணே கலைமானே’
கோடங்கி விமர்சனம்
யதார்த்த படங்களை சமரசம் செய்து கொள்ளாமல் திரைக்கு கொண்டு வரும் இயக்குனர் சீனு ராமசாமியின் படம்னு போய் ஏமாந்த ஏராளமான நல்ல சினிமா விரும்பிகள் படம் முடிஞ்சி கண்ணு கலங்கி வீங்கி வெறுத்து தெறிக்க வைச்சிருக்கிற படம்தான் கண்ணே கலைமானே...
இயற்கை விவசாயம் பத்தி பேசுறேன்னு இருக்குற விவசாயத்தையும் விவசாயிகளுக்கு மறக்கடிக்க இந்த படம் பாத்தா போதும்...
கதை ஒண்ணும் புதுசு இல்லை... ரசாயன உரங்களை எதிர்த்து இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் கிராமத்து படித்த இளைஞன் உதயநிதி... அந்த கிராமத்தை சேர்ந்த கிராம வங்கிக்கு அதிகாரியாக வருகிறார் தமன்னா.
ஆரம்பத்தில் மோதலில் தொடங்கும் தமன்னா உதயநிதி விவகாரம் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இந்த காதலுக்கு ஊரில் பெரிய புள்ளியாக இருக்கும் உதயநிதி குடும்பம் பெருசாக எதிர்ப்பு தெரிவிக்காமல...
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வழக்கமான இயக்குனர் சுந்தர்.சியின் படம். சிம்புவின் நடிப்பை மீட்டர் தாண்ட விடாமல் பார்த்துக் கொண்டதில் சுந்தர்.சி மீண்டும் ஜெயித்திருக்கிறார்.விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு லைட்டா கதை சொல்லிட்டு போகலாம்… வெளிநாட்டில் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு அதிபதி நாசர். அவருடைய மகன் சுமன், பேரன் சிம்பு. நாசரின் விருப்பத்தை மீறி ஒரே மகளான ரம்யாகிருஷ்ணன் தன்னை விரும்பிய பிரபுவை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வருவார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாசர் ஆத்திரத்தில் மகளை அடித்து விரட்டுவதோடு, பிரபுவை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். ஆசை மகளின் அத்தனை பொருட்களையும் தீயில் போட்டு எரித்து விடுகிறார். அப்படி வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாகிருஷ்ணனுக்கு கேத்ரின் தெரேசா, மேக்னா ஆகாஷ் என இரண்டு மகள்கள். பிரபு பிரபல வக்கீல்.
நாசருக்கு மீண்டும் மக...
பிரான்மலை விமர்சனம்
காதல் படத்தை இன்னொரு டைமன்ஷனில் காட்டியிருக்கும் படம் தான் பிரான்மலை.
வளரி கலைக்கூடம் தயாரிப்பில் வர்மன் , நேஹா ஜோடி நடித்துள்ள பிரான்மலை சமூகத்தில் இப்போதும் யதார்த்தம் இதுதான் என்பதையும், வெளியே தெரிவதெல்லாம் வேஷம் என்பதையும் பட்டவர்த்தனமாக வலியோடு சொல்கிறது.
கண்டிப்பான அப்பா வேலா ராமமூர்த்தி தன் மகன் வர்மன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வெளியூருக்கு வேலைக்கு போக சொல்கிறார். அப்பாவின் பேச்சை மீற முடியாமல் அதே நேரம் தனது நண்பன் பிளாக் பாண்டி இருக்கும் ஊருக்கு செல்கிறார். அங்கே ஆசிரமத்தில் வளரும் ஹீரோயின் நேஹாவை பார்க்கிறார். பார்த்ததும் காதல். நேஹாவுக்கு திடீரென ஒரு சிக்கல் அதை ஹீரோ எப்படி சரி செய்தார். இவர்கள் காதல் கை கூடியதா. காதலர்களை வேலா ராமமூர்த்தி என்ன செய்கிறார் என்பது தான் மீதி கதை. அறிமுக நடிகர் என்றே தெரியாமல் வர்மன் தன் கதாபாத்திரத்தி...
மாரி 2 விமர்சனம்
பில்டப் எல்லாம் ஓகேதான்… நீ பன்ன பில்டப்புக்கு இந்த கதையை டப்பாவுல கூட அடைக்க முடியாதேப்பா என்பதை போல இருக்கிறது தனுஷின் மாரி2. ரவுடியா நடிக்கிறதுன்னா தனுஷூக்கு ரொம்ப புடிக்கும்போல அதுவும் வகை தொகையே இல்லாம இஷ்டம்போல டயலாக் பேசி என்ன சொல்ல வர்றோம்னே தெரியாம ஒரு படத்துல நடிச்சிட்டு அதுவும் எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர் மாரின்னு சொல்றதுக்கும் ஒரு கெத்து வேணுமில்ல… அதுக்கு தனுஷை பாராட்டலாம்.
இந்த மாரி2 வர்றதுக்கு முன்னாடி வடசென்னை அப்படின்னு ஒரு படத்துலயும் தனுஷ் ரவுடியாதான் நடிச்சிருந்தார்… மகா மட்டமான டேஸ்ட் கதைய உலக தரத்துக்கு எடுத்துட்டோம்னு ஊர் முழுக்க சொந்த காசுல விளம்பரம் பண்ணிகிட்ட மாதிரி… இந்த மாரி2 படமும் பிரமாண்ட படம்னு சொந்த காசுல வௌம்பரம் பண்ணிக்க வேண்டியதுதான்…
ஒரு உண்மைய சொல்லணும்னா இந்த மாரி2 படம் கிறிஸ்மஸ் கொண்டாட்ட ரிலீஸ் பட்டியலில்...
கனா விமர்சனம்
கல்லடியை விட சொல் அடிக்கு வீரியம் ஜாஸ்தி என்பார்களே அது உண்மைதான்… அருண் ராஜா காமராஜாவின் கனா படத்தில் வசனங்களில் கேட்கும் "வினா" க்களுக்கு விடை கிடைத்தால் இந்தியா உலகை நிச்சயம் ஆளும்.
கிரிக்கெட் வெறியரான அப்பா சத்யராஜ் அழுகையை பார்க்கிற குட்டிப் பெண். அப்பாவின் அழுகைக்கு காரணம் கிரிக்கெட்டில் இந்தியா தோற்றது.
அந்த நொடி அந்த குட்டிப் பெண் எடுக்கிற முடிவு "தான் எப்படியும் கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்று அப்பாவுக்கு சந்தோஷம் தரவேண்டும்" என்பதுதான்.
அப்பாவாக சத்யராஜ் மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்ந்திருக்கிறார்கள்.
இந்த பொண்ணுகிட்ட என்னமோ இருக்குடான்னு படம் பாக்கும் ஒவ்வொருவரும் யோசிக்கிற ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த இடத்திலும் நடிகையாக தெரியாம கேரக்டராவே இருப்பது பலம்.
அப்பாவி விவசாயியாக அதே நேரம் நாட்டுப்பற்று மிக்க விளையாட்டு ரசிகராக வாழ்ந்திருக்கிறார் சத்யரா...