வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

HOME SLIDER

“பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள்” உ.பி மக்களுக்கு மம்தா வேண்டுகோள்

“பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள்” உ.பி மக்களுக்கு மம்தா வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள், சமாஜ்வாடி கட்சியை வெற்றி பெறச் செய்து பா.ஜ.க.வை தோற்கடிக்கும்படி உத்தர பிரதேச மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் இரண்டு நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றார். இந்த பயணத்தின் போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடன்  மம்தா பானர்ஜி  கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: சமாஜ்வாடி கட்சியை ஆதரித்து அவர்களை வெற்றி பெறச் செய்து, பா.ஜ.க.வை தோற்கடிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில்...
பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் மீட்பு

பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் மீட்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் மிக உயர்ந்த மலைப்பகுதியான காமேக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.  ...
ஹிஜாப் விவகாரம் – தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக கர்நாடகாவில் சர்ச்சை!

ஹிஜாப் விவகாரம் – தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக கர்நாடகாவில் சர்ச்சை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் நிலவும் நிலையில்,  கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியான வீடியோ ஒன்றில், மாணவர்கள் சிலர் கம்பம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர். அவர்கள் காவி கொடிகளை அசைத்தபடியும் காணப்பட்டனர். ஆனால் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றப்படவில்லை என்று சிவமொக்கா எஸ்.பி. லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார். அந்த கொடி கம்பத்தில் தேசிய கொடி இல்லை. அதனை நீக்கி விட்டு காவி கொடியை ஏற்றவும் இல்லை. அவர்கள் காவி கொடியை மட்டுமே கம்பத்தில் ஏற்றினர்.  அதன்பின்பு அவர்களே அந்த கொடியை கீழே இறக்கி விட்டனர் என அவர் கூறியுள்ளார். அனைவரும் மாணவர்கள் என்பதால் போலீசார் மிகவும் பொறுமையாக நடந்து கொண்தாகவும், ஆனால்  வன்முறையில் ஈடுபட்டால் கட...
உத்தர பிரதேசத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு!

உத்தர பிரதேசத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு!

HOME SLIDER, politics, செய்திகள்
  நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு நாளை தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதிவரை  7 கட்டங்களாக  தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித் தனியே களம் காண்பதில் நான்குமுனை போட்டி நிலவிகிறது. இதில்  ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் நீயா, நானா? என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சமாஜ்வாடி கட்சிக்காக அதன் தலைவர் அகிலேஷ்யாதவும், பகுஜன் சமாஜூகாக அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதியும், காங்கிரசுக்காக அந்தக...
முன்னாள் மனைவியின் திருமண உடை திருட்டு புகார்… திருமண நாளான்று Ex கணவர், காதலி கைது!

முன்னாள் மனைவியின் திருமண உடை திருட்டு புகார்… திருமண நாளான்று Ex கணவர், காதலி கைது!

HOME SLIDER, உலக செய்திகள்
  எத்தனையோ விதவிதமான காரணங்களால் திருமணம் நின்று போவதை பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் முன்னாள் மனைவியின் திருமண உடையை திருடி, வருங்கால மனைவிக்கு பரிசளித்த கணவன், காதலியுடன் திருமணத்தன்று கைது செய்யப்பட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்தின் போதே போலீசாரால் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமகனின் முன்னாள் மனைவியின் திருமண உடை உள்ளிட்ட சில பொருட்களை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் மேரி, ஆடம் இருவருக்கும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து சில வருடங்களிலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்திற்கு பிறகு அந்த நிறுவனத்தை விட்டு விலகிய மேரி, ஆடமையும் விவாகரத்து செய்...
எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்!  வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன  untold veerappan story

எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story

HOME SLIDER, NEWS, story, தமிழக அரசியல், வீடியோ
  எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story     https://youtu.be/74EAa_dYhLs
சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக சட்டப்பேர்வையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, கடந்த 2021 செப்டம்பர் 13-ம் தேதி ஏகமனதாக சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், 142 நாட்களுக்குப் பின் கடந்த ஒன்றாம் தேதி, ஆளுநரின் தனிச் செயலர் மூலம் நீட் விலக்கு மசோதா, தனக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீட் விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் முதலில் சபாநாயகர் அப்பாவு பேசினார். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சபாநாய...
ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த கிரணின் ஆபாச கவர்ச்சி!

ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த கிரணின் ஆபாச கவர்ச்சி!

CINI NEWS, HOME SLIDER
ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த 'வின்னர்' படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் முகம் சுளிக்கும் அளவிற்கு இருப்பதால் ரசிகர்கள் பலர் ஆபாச கமெண்ட்டுகள் பதிவு செய்து வருகிறார்கள்....
தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்!

தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் மும்பை திரையுலக பிரபலங்கள் மூலம்தான் நாடு முழுவதும் அறிமுகமானது. இன்று அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொடர்ந்து நடத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இப்போது மீண்டும் ஏக்தா கபூர் தயாரிப்பில் லாக்கப் என்ற நிகழ்ச்சி அறிமுகமாக இருக்கிறது. இதை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறார். முதல் போட்டியாளராக பூனம் பாண்டே கலந்து கொள்ள இருக்கிறார். இதில் 16 விஐபிகளை தனியாக லாக்கப்பில் அடைத்து விடுவார்கள். அவர்களுக்கு போன், டிவி, கடிகாரம் என்று எதுவும் கொடுக்கப்படமாட்டாது. இந்தச் சூழலில் அவர்கள் பல மாதங்கள் இருப்பார்கள். இந்தப் போட்டியில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இணையத்தில் ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைத் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் முதல் போட்டியாளராக பூனம் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்....
கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்!

கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
1988ஆம் ஆண்டு ‘மஹாபாரத்’ திரைப்படத்தில் பீமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரவீன் குமார் சோப்தி. இவர் நடிகர் மட்டுமின்றி, விளையாட்டு, அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர். இவர் 50-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த பீம்பாய் கதாப்பாத்திரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவிநாசி என்ற கதாப்பத்திரத்தில் நடித்திருந்த நாகேஷை பீம் பாய் ஒரே கையில் தூக்கி செல்லும் காட்சி இன்று வரை பிரபலமாக உள்ளது. விளையாட்டு வீரரான இவர், ஆசிய அளவில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளார். பிரவீன் குமார் நீண்ட நாட்களாக மார்பு தொற்று பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக்க...