குளத்தை காணோம் என ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பு
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணத்தை காணோம் காமெடி மிக பிரபலம்.
இப்போது அதே பாணியில் குளத்தை காணோம் என ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் நகராட்சி பகுதியில் 74 குளங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் ஏராளமான குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தற்போதும் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. பெரும்பாலான குளங்களின் நீர் வழி் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக அடைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருவாரூர் நகராட்சி 25-வது வார்டு பகுதியில் பயன்பாட்டில் இருந்த செட்டிகுளத்தை காணவில்லை என கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காணாமல் போன குளத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மீண்டும் திருவாரூர் நகர் பகுதிகளில் ‘குளத்தை காணவில்லை’ என போஸ்டர் அடித்து அந்த பகுதி ...