சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

politics

அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாக பேசிய RBVS மணியன் கைது!!

அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாக பேசிய RBVS மணியன் கைது!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாக பேசிய RBVS மணியன் கைது!! சென்னை : ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தி பேசிய, வி.எச்.பி. முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டார். சென்னை தியாகராயர் நகரில் வைத்து இன்று காலை தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்...
முத்துராமலிங்க தேவருக்கு கர்நாடகத்தில் சிலை வைக்க துணை முதல்வரிடம் கோரிக்கை!

முத்துராமலிங்க தேவருக்கு கர்நாடகத்தில் சிலை வைக்க துணை முதல்வரிடம் கோரிக்கை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  முத்துராமலிங்க தேவருக்கு கர்நாடகத்தில் சிலை வைக்க துணை முதல்வரிடம் கோரிக்கை! பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு திரைப்படமாக  தேசிய தலைவர் என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம்.சௌத்திரி     இந்த சூழலில் கர்நாடக துணை முதல்வர் DK சிவகுமார் அவர்களை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் திரைப்பட நாயகன் ஜெ எம் பஷீர் அவர்கள் AM சௌத்ரிதேவர் அவர்களுடன் கர்நாடக தேவர் அமைப்பை சார்ந்தவர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் தேசிய தலைவர் கன்னடத்தில் ராஷ்டிரிய நேத்தா என்ற பெயரில் வெளியாவதற்கு வாழ்த்து தெரிவித்தார் நாயகன் தேவர் போலவே உள்ளதாக பாராட்டினார் கர்நாடகாவில் தேசிய தலைவர் தேவர் சிலை அம...
26 கட்சிகளுடன் INDIA vs 38 கட்சிகளுடன் NDA 2024ல் வெல்லப்போவது யார்?

26 கட்சிகளுடன் INDIA vs 38 கட்சிகளுடன் NDA 2024ல் வெல்லப்போவது யார்?

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், முதல்வர் ஸ்டாலின்
  மொத்தம் 26 கட்சி.. பாஜகவுக்கு எதிராக பெங்களூரில் உருவான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி "INDIA, 38 கட்சிகளுடன் NDA கூட்டணி. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் இணைந்து 2வது கட்டமாக இன்று பெங்களூரில் சோனியா காந்தி தலைமையில் தீவிர ஆலோசனை நடந்தது. புதிய கூட்டணி உருவாகி உள்ளது. மேலும் அந்த கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைவால் இந்த கூட்டம் ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கியது. நேற்றைய ஆலோசனையில் பங்கேற்காத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்பட இன்ன...
சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கியுள்ள ‘சத்யதேவ்சட்டஅகாடமி’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சூர்யாவுக்கு வாழ்த்து சொன்னார்!

சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கியுள்ள ‘சத்யதேவ்சட்டஅகாடமி’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சூர்யாவுக்கு வாழ்த்து சொன்னார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின்
    சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கியுள்ள 'சத்யதேவ்சட்டஅகாடமி'யை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சூர்யாவுக்கு வாழ்த்து சொன்னார்!   முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் கூறியிருப்பதாவது! சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள #SathyadevLawAcademy-யைத் தொடங்கி வைத்தேன். இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி @Suriya_...
வாய்க் கொழுப்பில் பேசி சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் காலில் விழுந்து பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி!

வாய்க் கொழுப்பில் பேசி சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் காலில் விழுந்து பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி!

HOME SLIDER, kodanki headlines news, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  வாய்க் கொழுப்பில் பேசி சர்ச்சையில் சிக்கி நீதிமன்றம் காலில் விழுந்து பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி! நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால் கிரிமினல் அவதூறு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.   கடந்த 2018ல் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அப்போதைய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அப்போது பாஜக ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   குருமூர்த்தியின் இந்த ட்வீட்டுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கத்தினர் டெல்லி உயர் நீதிமன...
மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? – குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி

மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? – குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகைகள்
  மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் கேள்வி பெண்களுக்கு பிரச்சனை என்றால் தேசிய  மகளிர் ஆணையம் கேள்வி கேட்கும் என கூறிய பாஜக நிர்வாகி  குஷ்பூ, மல்யுத்த வீராங்களைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? என அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.  திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி  தன்னை பற்றி பொது மேடையில் அவதூறாக பேசியதாகி கூறி பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருக்கும்  குஷ்பூ தனது அலுவலகத்திலிருந்து செய்தியார்களுக்கு அளித்த  பேட்டியில் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். பெண்களை பற்றி அவதூறாக பேச தந்தைக்கோ கணவருக்கோ உரிமை இல்லாத போது  திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு பொதுக்கூட்டத்தில் எப்படி பேச உரிமை இருக்கிறது ?  என கேள்வி எழுப்பி கடுமையாக சாடினார்.   ...
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைகோர்ப்பேன்- திருமாவளவன்!

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைகோர்ப்பேன்- திருமாவளவன்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதை தான் உறுதிப்படுத்துகிறது. புதிதாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது குடியரசு தலைவரும் அழைக்கப்பட...
ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம். - முதல்வர் ஸ்டாலின்...
மலிவான அரசியல் செய்பவர்களின் எண்ணம் நிறைவேறாது – வீடியோ விளக்கம் வெளியிட்ட பிடி ஆர்

மலிவான அரசியல் செய்பவர்களின் எண்ணம் நிறைவேறாது – வீடியோ விளக்கம் வெளியிட்ட பிடி ஆர்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  சர்ச்சைக்குரிய ஆடியோ தொடர்பாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வீடியோ மற்றும் அறிக்கை வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும், முக்கிய நிதி சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை, வெறும் இரண்டே ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம். அதனால்தான் இதனை திராவிட மடல் ஆட்சி என்று கூறுகிறோம். திராவிட மாடலை ஜீரணிக்க முடியாத சிலர்தான் இதுபோன்ற மலிவான தந்திரங்கள் கொண்ட போலியான ஆடியோ ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை உதயநிதி ஸ்டாலின். எனக்கு சபரீசன் மிகவும் நம்பகமான ஆலோசகர். நான் பேசியதாக வெளியான ஆடியோ ஒளிப்பதிவு முழுக்க முழுக்க சித்தரிக்கபப்ட்டவை. இதுபோன்ற ஒலிப்பதிவுகள் உலக அளவில் கிடைக்கின்றது...