கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது:
தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன்*
*பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம்*
*அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை*
*சாதி மத இன வேறுபாடுகளைக் கடந்து கரோனாவை விரட்ட உறுதியேற்போம்*
*விழித்திரு , விலகி இரு , வீட்டிலேயே இரு*
*21நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல , உங்கள் குடும்பத்தை காக்கும் அரசின் உத்தரவு*
*அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும்*
*கரோனாவின் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்*
*கரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறது*
*தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிﹷ*...
கொரானா தாக்குதலில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் !
உலகை அச்சத்தில் ஆழ்த்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி வரும் கொரானா வைரஸ் பாதிப்பில் அடித்தட்டு மக்கள் தொடங்கி அரச குடும்பத்தினர் வரை சிக்கியுள்ளனர்.
சீனாவில் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று உலகம் முழுதும் வேகமாக பரவி வரும் கொரானா வைரசை கட்டுப்படுத்த பல முயற்சிகள் செய்து வருகிறார்கள்.
இங்கிலாந்து அரசி எலிசபெத் ஏற்கனவே தனிமைபடுத்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இளவரசர் சார்லசுக்கு கொரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அரச குடும்பத்தில் கொரானா தொற்று கண்டறியப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்....
21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு மக்கள் வெளியேறாமல் தனிமையில் இருப்பதுதான்.
ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என மோடி கூறியிருக்கிறார்.
இதற்கு இந்திய மக்கள்
அனைவரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது…
உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.
பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.
அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என கமல் பதிவிட்டுள்ளார்.
இ
கமலின் இந்த கருத்து ...
தமிழகத்தில் கொரானா பாதிப்பில் முதல் பலி..!
உலகம் முழுதும் பெரும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கம் தமிழகதிலும் மிக அதிகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே 18 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர்.
இவர்களில் மதுரையை சேர்ந்த 54 வயது நபர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.
இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வெளிநாடு, வெளிமாநிலம் எங்கும் சென்று வராமல் சமூக பரவல் மூலமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடதக்கது.
மதுரையை சேர்ந்த அந்த நபருக்கு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை அதிகளவில் இருந்ததாம்.
இந்த விவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
கொரானா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பலியான முதல் நபர் இவர்....
சீனாவில் கொரானா தாக்குதலை அடுத்து ஹாண்டா வைரஸ் தாக்கம் - அதிர்ச்சியில் உலக நாடுகள்
உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் உயிர்பலிகளையும் ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையாக போராடி வரும் நிலையில் அதே சீனாவில் மீண்டும் ஒரு உயிர்க் கொல்லி வைரஸ் ஆக ஹாண்டா என்ற புதியவகை தொற்று நோய்கிருமி தாக்கம் தொடங்கி உள்ளதாம்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
அவரை பரிசோதித்த டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் அவருக்கு ஹாண்டா வைரஸ் தாக்குதல் இருந்தது தெரியவந்துள்ளது.
இவர் பயணம் செய்த பேருந்தில், அவரோடு இருந்த 32 பயணிகளுக்கும் இந்த நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த வைரஸ் எலிகளிடமிருந்து பரவியிருக்கும் என்று கூறப்படுக...
தனிமைபடுத்தபட்டவர்கள் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கண்டிப்பாக தனிமையில் இருக்க வேண்டும்... மீறினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
கொரானா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. தயவு செய்து அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்.
குறிப்பாக சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவ்ர்கள் தயவு செய்து உங்கள் பயண விவரங்களை தாமாக முன்வந்து சொல்லுங்கள். கண்டிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் கண்டிப்பாக வெளியே செல்லக்கூடாது.
ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் அதை அலட்சியம் செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உத்தரவுகளை மீறுகிறவர்களை இனியும் அரசு வேடிக்கை பார்க்காது.
நீண்ட காலமாக மருந்து எடுப்பவர்களுக்கு அவர்களுக்கு தேவைபடும் ம...
இப்போதாவது என் மருந்தை கொடுக்க அனுமதியுங்கள் கொரானாவை ஒழிக்கலாம் - வேண்டுகோள் விடும் சித்த மருத்துவர் திரு.தணிகாசலம்!
கொரோனா பீதியில் அனைவரும் அச்சத்தில் உள்ள நிலையில் ஒருபக்கம் அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கை எடுத்து வருகிறது. இன்னோரு பக்கம் உயிரை காப்பற்ற போராடி வரும் மக்கள் மருத்துவர் திருத்தணிகாசலம்.
என்னிடம் கொரோனா நோயாளியை ஒப்படையுங்கள் நான் காப்பற்றித் தருகிறேன் என்ற முழக்கங்களுடன் மாதகணக்கில் போராடி வரும் மருத்துவர்.
ஏற்கனவே டெங்குவிற்கு மருந்து கண்டுபிடித்து சாதனையும் நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.
பல போராட்டங்களுக்கு பிறகு இவர் கண்டுபிடித்த மருந்தை சீனா அரசு ஏற்று அவருக்கு அழைப்பும் விடுத்தது. அதைபோல் எல்ல ஊடகங்களிலும் தன்னிடம் மருந்து இருப்பதை நிறுபித்து காட்டினார். அரசுக்கு தொடர்ந்து கொரோனா மருந்து கண்டுபிடித்ததை நிறுபிக்கும் போராட்ட...
கொரானா வைரஸ் பரவலை தடுக்க அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியமான நாட்கள்.
இன்று இரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் சுய கட்டுப்பாட்டில் இல்லாமல் போனால் பெரும் அழிவை சந்திக்க வேண்டி வரும்.
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்.
காட்டுத்தீ போல் கொரானா பரவி வருகிறது. .
ஒருவருக்கு தெரியாமலேயே கொரானா தொற்று ஏற்படுகிறது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என்று கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
கொரானாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் சரி செய்து விடலாம்.
வல்லரசு நாடுகளாலேயே கொரானாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரானாவை கட்டுப்படுத்த ஒரே வழி சுய கட்டுப்பாட்டுடன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதுதான்.
பொருளாதாரத்தை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம்.
அரசின் நடவ...
கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிதி - முதல்வர் அறிவிப்பு
சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க அம்மாவின் அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
நேற்று தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த நான் பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். அவற்றுக்கு இணங்க, நேற்று மாலை விரிவான அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்கீழ், சென்னையில் காவல் ஆணையரும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாணைகள் அனைத்தும் இன்று ம...