வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

செய்திகள்

தண்ணீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் ஏரி,குளங்களை தூர் வார வேண்டும் – ரஜினி

தண்ணீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் ஏரி,குளங்களை தூர் வார வேண்டும் – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தர்பார் ஷூட்டிங் முடிந்து மும்பையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ரசிகர்களை மனமார்ந்து பாராட்டுகிறேன். அவர்களை வாழ்த்துகிறேன். ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விசயம். இதுபோன்ற நல்ல வேலைகளை முதலில் இருந்து செய்து வருகிறோம். இப்போதுதான் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்படவேண்டும். பாரதீய ஜனதா அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை...
“வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்…

“வால்டர்” சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "வால்டர்" சிபிராஜ் படத்தில் இணைந்த இயக்குனர்கள்... நடிகர் சத்யராஜ் நடித்த 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படம், கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இப்போது சத்யராஜ் மகன் சிபிராஜ் 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். ஏற்கனவே வால்டர் படக்கதையும் , தலைப்பும் எனக்குதான் சொந்தம் என தயாரிப்பாளர் சிங்காரவேலன் சர்ச்சை ஏற்படுத்த பரபரப்பானது. பேச்சு வார்த்தைக்கு பின் வால்டர் சிக்கல் தீர்ந்தது. இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிபிராஜுடன் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்...
தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தினகரனுடன் மோதல் ஏற்பட்டதால் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். தினகரனின் வலது கரமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீரென தினகரனை விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இந்த முட்டல் மோதல் உச்சகட்டத்தை அடைந்ததால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், ஓ.பி.எஸ் தரப்பில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதற்கு முன்பே தங்க தமிழ்செல்வனை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக தினகரன் அறிவித்திருந்தார். இதற்கிடையில் அமமுகவில் இருந்து வெளியேறிய...
இன்று நேற்று நாளை பார்ட் 2 தொடங்கியது..!

இன்று நேற்று நாளை பார்ட் 2 தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  திருகுமரன் எண்டர்டயின்மெண்ட்ஸ்' சிவி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில் 'இன்று நேற்று நாளை 2' 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில், திருகுமரன் எண்டர்டயின்மெண்ட்ஸ் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார். முண்டாசுபட்டி மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை - இணை இயக்குனராக பணியாற்றிய எஸ் பி கார்த்திக் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஆர். ரவிக்குமார், அதன் இரண்டாம் பாகத்திற்கு கதை, திரைகதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார். 'சூது கவ்வும், தானா சேர்ந்த கூட்டம், மிஸ்டர். லோக்கல்' ஆகிய படங்களை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இப்படத்திற...
ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..!

ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ராஜமௌலி வெளியிட்ட காப்பான் சூர்யாவின் பந்தோபஸ்த்..! சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் காப்பான் படத்தின் தெலுங்கு போஸ்டர் மற்றும் தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். லைகா தயாரிப்பில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. அயன் மற்றும் மாற்றான் படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ள நிலையில் காப்பான் படத்தின் தெலுங்கு தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கு பதிப்புக்கு பந்தோபஸ்த் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டார். ஏற்கனவே நீ...
யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ்

யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
யோகிபாபு நடிக்கும் கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சென்சாரில் யூ சான்றிதழ் வாங்கிய கூர்கா படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து உள்ளது....
பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த்

பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது - விக்ராந்த்* ஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு - விக்ராந்த் எம்10 புரொடக்‌ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன்...
காவி வேட்டி சர்ச்சை…  மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி

காவி வேட்டி சர்ச்சை… மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காவி வேட்டி சர்ச்சை... மகன் விஜய்யை வம்புக்கு இழுக்கும் அப்பா எஸ்.ஏ.சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது ஜெய், அதுல்யா, வைபவியை வைத்து படம் இயக்கி வந்தார். இந்த படத்தின் தலைப்பு இன்று வெளியானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படத்துக்கு "கேப்மாரி" என பெயர் வைத்ததாக கூறினார். பின்னர் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது "தேர்தல் முடிந்தபின் நாடு முழுதும் காவி வேட்டி கட்டித்தான் எல்லாரும் அலையப் போகிறார்கள் என்று சொன்னீர்கள். இப்போது விஜய் நடிப்பில் வெளியாக பிகில் பட டிசைனில் அவர் காவி வேட்டி கட்டியிருக்கிறார். இதை எப்படி பார்க்கிறார்கள்? என்று கேட்டபோது... கடும் ஆவேசமானார் எஸ்.ஏ.சி... அதோடு " என் படம் கேப்மாரி பற்றி கேளுங்கள். மற்ற்படி விஜய் காவி வேட்டி கட்டினால் ஏன் என்று விஜய்யிடம் போய் கேளுங்கள் " என படபடவென பேசினார். கடைசிவரை கேட்ட கேள்விக்க...
ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்… செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு

ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்… செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்... செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு ஜெய்- அதுல்யா-வைபவி நடிக்கும் படத்தை எஸ்.ஏ.சி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியபோது: இந்த படம் எனக்கு 70வது படம். நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன். இந்த படத்தை முடித்த பிறகு இந்த படம் வெற்றி பெற்றாலும் இல்லாமல் போனாலும் இனி படம் இயக்க மாட்டேன். ஜெய் பத்தி சொல்லும் போது ஒரு விளையாட்டு பையனா இருக்கானே என்று எல்லாரும் சொன்னார்களேன்னு பார்த்து பேசினேன். ஆனால் ஜெய் ரொம்ப ஆர்வமா நடிச்சார். ரொம்ப பெருசா வருவார். அவரால எப்ப ஷூட்டிங் வர முடியும்னு கேட்டுகிட்டு அதுக்கு ஏற்றார் போல ஷூட்டிங் நடத்தினேன். நம்ப சமூகத்தில் ஒரு விஷயத்தை பேச ரொம்ப தயங்குவார்கள். ஆனா அந்த விஷயம் ரொம்ப அருமையானது. செக்ஸ் என்பது வாழ்க்கையில் ரொமப அழகான விஷயம். எ...
நடிகர் சங்க நில மோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி ராதாரவி,சரத் எந்நேரமும் கைதாகலாம்..!

நடிகர் சங்க நில மோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி ராதாரவி,சரத் எந்நேரமும் கைதாகலாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நில மோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி ராதாரவி எந்நேரமும் கைதாகலாம்..! நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்று மோசடி செய்ததாக முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, செல்வராஜ், காளை ஆகியோர் மீது மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் வேங்கட மங்கலம் கிராமத்தில் இருந்த நடிகர் சங்கத்தின் இடத்தை உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் பதவியை முறைகேடாக பயன் படுத்தி விற்பனை செய்ததாக எழுந்த புகாரை காஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நில மோசடி வழக்கில் சிக்கிய 4 பேரில் காளை இறந்து விட்டார். ராதாரவி, சரத்குமார் ,செல்வராஜ் மீது வழக்கு நடந்து வந்தது.   இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி குற்றம்சட்டப்பட்டவர்கள் மீது சார்ஜ்ஷீட் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து நில மோசடி வழக்கு வேகம் எடுத்து முறைகேடு செய்தவர்கள...