மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு – சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா!
மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு - சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா!
பேஸ்புக்கில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவர் நேற்று, குரான் வசனம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், யுவன் சங்கர் ராஜா, இந்தப் பதிவின் வாயிலாக மதப் பிரச்சாரம் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார்.
அந்த ரசிகர் போட்ட கமெண்டில், “நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தை பரப்பும் தளம் இது இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்” என்று சொல்லி இருந்தார். இதற்கு யுவன்சங்கர் ராஜா, வெளியேறிவிடுங்கள் என்று பதிலடி கொடுத்தார்.
மேலும், சிலர் ஒருபடி மேலே சென்று நீங்கள் பதிவிட்டிருக்கும் கருத்தை பகவத் கீதையில், நீங்கள் காணவில்லையா எனவும் க...