வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

HOME SLIDER

மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு – சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா!

மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு – சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு - சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா! பேஸ்புக்கில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவர் நேற்று, குரான் வசனம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், யுவன் சங்கர் ராஜா, இந்தப் பதிவின் வாயிலாக மதப் பிரச்சாரம் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார். அந்த ரசிகர் போட்ட கமெண்டில், “நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தை பரப்பும் தளம் இது இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்” என்று சொல்லி இருந்தார். இதற்கு யுவன்சங்கர் ராஜா, வெளியேறிவிடுங்கள் என்று பதிலடி கொடுத்தார். மேலும், சிலர் ஒருபடி மேலே சென்று நீங்கள் பதிவிட்டிருக்கும் கருத்தை பகவத் கீதையில், நீங்கள் காணவில்லையா எனவும் க...
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் பலி!

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் பலி!

HOME SLIDER, NEWS, politics
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் பலி! இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 18297 அதிகம் ஆகும். மொத்த பாதிப்பு 1,83,76,524 ஆக உயர்ந்துள்ளது நேற்று ஒரே நாளில் 3645 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்க...
கொரோனா விழிப்புணர்வு… ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடிய கேரளா போலீஸ் – வைரலாகும் வீடியோ!

கொரோனா விழிப்புணர்வு… ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடிய கேரளா போலீஸ் – வைரலாகும் வீடியோ!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு... ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடிய கேரளா போலீஸ் - வைரலாகும் வீடியோ! இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் சமீபத்தில் வெளியாகி வைரலான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி உள்ளனர். இந்த பாடலுக்கு போலீசார் மாஸ்க் அணிந்தபடி நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். கேரள போலீசாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது டுவிட...
ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்!

ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஓடிடி-யில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 படங்கள்! இயக்குனர் மணிரத்னம் தமிழில் ‘பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பம்பாய்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 26 படங்கள் டிஜிட்டலில் மாற்றப்பட உள்ளதாம். இதற்கான பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த 26 படங்களும் டிஜிட்டலில் மாற்றப்பட்ட பின் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம...
கர்ணன் பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு… சூர்யா படத்தில் நடிக்கிறார்!

கர்ணன் பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு… சூர்யா படத்தில் நடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கர்ணன் பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு... சூர்யா படத்தில் நடிக்கிறார்! மலையாள நடிகையான ரஜிஷா விஜயன், தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கர்ணன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன், அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில், நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தான் ரஜிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். ஆனால் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இ...
உத்தரவு போட்ட விஜய்… களத்தில் இறங்கிய ரசிகர்கள்!

உத்தரவு போட்ட விஜய்… களத்தில் இறங்கிய ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
உத்தரவு போட்ட விஜய்... களத்தில் இறங்கிய ரசிகர்கள்! இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஒருபுறம் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விஜய் சொன்னதன் பேரில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள் விஜய் மக்கள் இயக்கத்தினரால் வழங்கப்பட்டன....
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்!

ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்! நடிகை ரைசா வில்சன் கடந்த வாரம் தன்னுடைய சமூக வலைதளங்களில் முகம் வீங்கி இருப்பது போன்ற ஒரு படத்தை பதிவு செய்து மருத்துவர் பைரவி செந்திலிடம் எடுக்கப்பட்ட சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் பைரவி செந்தில், ரைசா மூன்று நாட்களில் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது மானநஷ்ட வழக்கை சந்திக்க நேரிடும் என்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு மற்றொரு நோட்டீஸ் மூலம் பதில் அளித்திருந்த ரைஸா, தனது முகத்திற்கு பைரவியின் சிகிச்சையால் தான் இப்படி ஆனது என்றும் அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது மருத்துவர் பைரவி செந்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ’ரைசா...
இந்தியன் 2 விவகாரம்…. லைகா – ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

இந்தியன் 2 விவகாரம்…. லைகா – ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இந்தியன் 2 விவகாரம்.... லைகா - ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி! நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமையன்று, ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர்...
தடுப்பூசி பெயரில் 1.25 லட்சம் கோடி கொள்ளை – திடுக் புகார்

தடுப்பூசி பெயரில் 1.25 லட்சம் கோடி கொள்ளை – திடுக் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். இது தொடர்பாக அக்கட்சியின் தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்….. இந்தியாவில் இதுவரை எல்லாவிதமான தடுப்பூசி திட்டங்களும், அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது என்பதே வரலாறு. ஆனால் தற்போது கொரானாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிக்குக் கட்டணம் செலுத்தித் தான் பயனாளிகள் செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, இந்திய மக்களின் உயிரோடு விளையாடுகிற கொடுமையான காரியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்தவமனைகளில் குறைந்த விலையிலும் கொரோனா தடுப்புசி செலுத்தி வரப்பட்டது. மத்திய அரசு 18 வயது முதல...
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். என்னுடையை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது ப...