திரை உலக முப்பெரும் விழா: எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார் விஜயகாந்த்
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடார்பாளார் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ் ஆனந்தன் பி.ஆர்.ஓ. ஆன 60-வது ஆண்டு நிறைவு, பி.ஆர்.ஓ. யூனியன் பதிவு செய்யப்பட்ட 25 ஆண்டுகள் ஆகியவை முப்பெரும் விழாவாக சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவார்களுக்கு விருது வழங்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் வி.பி.துரைசாமி, சவுகார் ஜானகி, வாணிஸ்ரீ, ஷீலா, ரேவதி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, வெண்ணிறஆடை நிர்மலா, வைஜெயந்தி மாலா, கவிஞர் முத்துலிங்கம், ஆரூர்தாஸ், லதா உள்ளிட்டவர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலையை விஜயகாந்த் திறந்து வைத்தார். நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் முன்னிலை வகித்தார்.
...