வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

நடிகைகள்

கையில் சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

கையில் சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கையில் சுத்தியலுடன் நயன்தாரா... வைரலாகும் வீடியோ! தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நயன்தாரா சுத்தியலுடன் வந்து ‘காலம் ஒரு துரோகி...’ என்று வசனம் பேசுகிறார். இந்த புரமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது – பிரபல நடிகை!

சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது – பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது - பிரபல நடிகை! சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ரைட்டர். நீலம் புரடக்ஷன் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கும் இப்படத்தில் இனியா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இனியா பேசும் போது, ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்க்ளின் என்னிடம் கதை சொல்லும் போது சிறப்பாக சொன்னார். ஆனால் அதில் என் கதாபாத்திரம் மட்டும் சொல்லவே இல்லை. உங்கள் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்று சொன்னார். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறேன். ரைட்டர் படத்தில் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது. எதோ முக்கியமான கதாபாத்திரம் நடிக்கிறார் என்று நினைத்தேன். படப்பிடிப்பு தளத்தில் தான் தெரியும் அவர்தான் ஹீரோ என்று. தயாரிப்ப...
சிக்கலில் ஐஸ்வர்யா ராய் – ஆஜராக அதிரடி சம்மன்!

சிக்கலில் ஐஸ்வர்யா ராய் – ஆஜராக அதிரடி சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சிக்கலில் ஐஸ்வர்யா ராய் - ஆஜராக அதிரடி சம்மன்! பனாமா ஆவண விவகாரம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியல் பனாமா ஆவணம் என்ற பெயரில் வெளியானது. இதில் பல நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பகுதி 37-ன் கீழ், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜாராக வேண்டும் என அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக அவர் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது....
மகளின் முகத்தை வெளியிடாததற்கு நன்றி – அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி!

மகளின் முகத்தை வெளியிடாததற்கு நன்றி – அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, sports, சினி நிகழ்வுகள், நடிகைகள், விளையாட்டு செய்திகள்
மகளின் முகத்தை வெளியிடாததற்கு நன்றி - அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி! இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து இருவரும் தங்களது மகளின் முகத்தை சமூக வலைதளங்களில் வெளியிடாமலேயே ரகசியம் காத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் விராட் கோலி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்திற்காக மும்பை விமான நிலையம் சென்றிருந்தபோது தனது மகள் வாமிகா, மனைவி அனுஷ்கா சர்மா இருவரையும் அழைத்து சென்றார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், கோலியின் மகளின் முகத்தை புகைப்படம் பிடித்துவிட்டார். ஆனாலும் அந்த புகைப்படம் எந்த பத்திரிக்கையிலும் வெளியாகவில்லை. இந்நிலையில் அந்த பத்திரிக்கையாளருக்கு அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- என் மகளின் புகைப்படம், வீடியோ எதையும் வெளியிடாத அந்த பத்திரிக்கை...
நெருப்போடு விளையாடும் கீர்த்தி பாண்டியன்!

நெருப்போடு விளையாடும் கீர்த்தி பாண்டியன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, நடிகைகள்
  80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் அருண்பாண்டியன். அதிரடி படங்களுக்கு புகழ்பெற்றவர். பின்னர் தயாரிப்பாளராகி பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன், தும்பா படம் மூலம் அறிமுகமான இவர் அன்பிற்கினியாள் படம் மூலம் கவனிக்கப்பட்டார். அப்பா - மகள் உறவு குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஷாலினி இயக்கத்தில் உருவாகும் 'கண்ணகி' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கீர்த்தி பாணியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவிப்பார்கள். இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் நெருப்போடு விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிற...
கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா!

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா! பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் பக்கம் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதை நடிகை ராதிகாவின் மகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். நடிகை ராதிகாவும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார். இந்நிலையில் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது....
பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகைகள்
பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இரு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 100 நாட்கள் படப்பிடிப்பு நிறைவை அடுத்து படக்குழுவினரின் ஸ்பெஷல் புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலானது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாகத் தெரி...
’தி ஃபேமிலி மேன் 2’ சீரிஸ்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா

’தி ஃபேமிலி மேன் 2’ சீரிஸ்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா

HOME SLIDER, MOVIES, நடிகைகள்
’தி ஃபேமிலி மேன் 2’ சீரிஸ்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் வெப் சீரிஸ் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சர்ச்சைக்கு மத்தியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சமந்தாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமந்தாவின் திறமையை சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகை ஓடிடி என்ற ஃபிலிம் ஃபேர் விருதை வென்றுள்ளார். ஓடிடியின் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை கவுரப்படுத்தும் வகையில் ஃபிலிம் ஃபேர் ஓடிடி விருது வழங்கப்படுகிறது. விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துக்கொண்ட சமந்தா,'என்னுடைய 5வது...
மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா!

மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் - சமந்தா! நடிகை சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். அவரது விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. சமந்தா மீதும் பழி சுமத்தப்பட்டன. இதனை மறுத்த சமந்தா தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கும் சென்றார். இந்தநிலையில் விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘‘மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். விவாகரத்து செய்து பிரிவதால் மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் இவ்வளவு வலிமையானவளாக இருப்பேன் என்று நினைக்கவில்லை. நான் வலிமையானவள் என்பதில் பெருமைப்படுகிறேன். சொந...
நான் மிகமிக துணிச்சலான பெண்: நடிகை சோனியா அகர்வால்!

நான் மிகமிக துணிச்சலான பெண்: நடிகை சோனியா அகர்வால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நான் மிகமிக துணிச்சலான பெண்: நடிகை சோனியா அகர்வால்! காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘திருட்டுப் பயலே', ‘கோவில்’, ‘மதுர’, ‘புதுப்பேட்டை' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘கிராண்ட்மா' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகை சோனியா அகர்வால் கலந்து கொண்டு பேசியதாவது:- இந்த படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். பல படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்து உள்ளேன். இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண். நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு காரில் தனியாகவே பயணம் செய்திருக்கிறேன். காரை நானே ஓட்டுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது என்...