வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

நடிகைகள்

சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது

சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத் அடித்து கொலை செய்ததாக தொடர்ந்து கூறி வந்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து தான் இறந்துள்ளார் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது. சித்ரா பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்துள்ளனர். இதனால் இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் தொடங்கியுள்...
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின்  “அன்பறிவு”

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் “அன்பறிவு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “அன்பறிவு” சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் புதிய திரைப்படம் !   மிகச்சிறந்த குடும்ப திரைப்படங்கள் மற்றும் தரமான கதைகளை வெற்றி திரைப்படங்களாக தொடர்ந்து தந்து, தமிழ் சினிமாவில் பலதலைமுறைகளாக மிகப்பெரும் நடிகர்களுடன், எம் ஜி ஆர் துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித்குமார், தனுஷ் வரையில் பயணித்து, மிகப்பெரும் ஹிட் படங்கள் தந்து தனக்கென தனித்த பெயரை பெற்றுள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம். தற்போது இந்நிறுவனம் வளர்ந்து வரும் இளம்தலைமுறை நடிகரான நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் “அன்பறிவு” படத்தை தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் அஷ்வின் ராம் இப்படத்தினை இயக்குகிறார். தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் கூறியதாவது... சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் எப்போதும் குடும்பங்கள் கொண்டாடும் படைப்புகளை, தருவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. அப்படைப்புகள் எப்போ...
கஸ்தூரி போலீஸாக நடிக்கும் “இ.பி.கோ 302“.

கஸ்தூரி போலீஸாக நடிக்கும் “இ.பி.கோ 302“.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “இ.பி.கோ 302“. இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரிக்கு துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின் பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – தண்டபாணி, இசை – அலெக்ஸ்பால், எடிட்டிங் – காளிதாஸ், கலை – மணிமொழியன், ஸ்டண்ட் – தீப்பொறி நித்யா, பாடல்கள் – முத்துவிஜயன், ராஜ குணசேகரன்,தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்,இணை தயாரிப்பு – ஆர்.பிரபு, தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சலங்கைதுரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர். இ.பி.கோ 302 படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை கஸ்தூரி பேசியதாவது.. ...
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட தடை நீக்கம்!

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட தடை நீக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள் வாங்கியதாகவும் எனவே விநியோக உரிமை தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் ஆஜரான வழக்க...
சசிக்குமார் ஜோடியாக வாணி போஜன்

சசிக்குமார் ஜோடியாக வாணி போஜன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
M.சசிகுமார் நடிப்பில் அனிஸ் இயக்கும் “பகைவனுக்கு அருள்வாய்” கூர்கா படத்தை தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் M.சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக M.சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ...
கவர்ச்சிக்கு மாறிய இனியா!

கவர்ச்சிக்கு மாறிய இனியா!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இனியா. பின்னர் மெளனகுரு, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார். இருப்பினும் முயற்சியை கைவிடாத இனியா, பட வாய்ப்பை பெற தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இனியாவின் இந்த முடிவு அவருக்கு கைகொடுக்குமா?  ...
மறைந்த VJ சித்ராவின் முதல் திரைப்படம் விரைவில் ரீலீஸ் !

மறைந்த VJ சித்ராவின் முதல் திரைப்படம் விரைவில் ரீலீஸ் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வந்த நடிகை ‘சித்ரா’ சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவரது இழப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குறுகிய காலத்தில் தனது உழைப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் சித்ரா. வெள்ளித்திரையில் முதலும் கடைசியுமாக ஒரு படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. Infinite pictures தயாரிப்பில் “கால்ஸ்” என்ற திரைப்படத்தில் தான் சித்ரா நடித்துள்ளார். டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, வினோதினி, ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜெ.சபரீஸ் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்....
அர்ச்சனாவை வெளுத்து வாங்கும் கமல் – நமட்டு சிரிப்பு சிரிக்கும் அனிதா

அர்ச்சனாவை வெளுத்து வாங்கும் கமல் – நமட்டு சிரிப்பு சிரிக்கும் அனிதா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  கால் சென்டர் டாஸ்க்கில் வென்ற முதல் மூன்று நபர்களுக்கு நாமினேஷன் மாற்றக்கூடிய சக்தி கொடுக்கப்பட்டது. பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார். ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா, சோம் சேகரையும் நாமினேட் செய்தார். இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் நேற்று ஜித்தன் வெளியே சென்றார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அர்ச்சனா அடிக்கடி மைக்கை கழட்டுவது பற்றி கேட்டு வெளுத்து வாங்கியுள்ளார் கமல். அர்ச்சனாவை திட்டியதால் குதுகலமாய் நமக்கு சித்தரிக்கிறார் அனிதா. கடந்த சில நாட்களாக லவ் பேட் Gang-ஐ வெளுத்து வாங்குவதால் அனிதாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   https://twitter.com/vijaytelevision/status/1338010563096416256?s=20...
சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு

சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சில்க் ஸ்மிதாவின் ‘தி டர்ட்டி பிக்சர்’ வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை மர்மச்சாவு நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி பிரபல இயக்குனர் மிலன் லூத்ரியா எடுத்த இந்தி படம் ‘தி டர்ட்டி பிக்சர்’. 2011-ம் ஆண்டு வெளியான இந்த படம் உள்பட பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பிரபல இந்தி நடிகை ஆர்யா பானர்ஜி (வயது 33). இவரது தந்தை மறைந்த சிதார் இசைக்கலைஞர் நிகில் பந்தோபாத்யா ஆவார். மும்பையில் மாடலிங் கலைஞராகவும் புகழ் பெற்றவர், ஆர்யா பானர்ஜி. இவர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் வழக்கம்போல வேலைக்கு அங்கு சென்றார். அழைப்பு மணியை அழுத்தினாலும் நீண்ட நேரமாக பதில் இல்லை. செல்போனில் அழைத்தாலும், அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் சந...
மழையில் ஆட்டம் போடும் நடிகை ஆல்யா மானசா

மழையில் ஆட்டம் போடும் நடிகை ஆல்யா மானசா

HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. இந்த ஒரே ஒரு சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஐலா எனும் பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை ஆல்யா மானசா நடிப்பை தாண்டியும் நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் ஆல்யா மானசா சர்சைக்குரிய ஆடையில் மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது....