கொரானா வார்டில் டூ பீஸ் உடை அணிந்த நர்சுக்கு மாடலிங் வாய்ப்பு!
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள துலா நகர அரசு ஆஸ்பத்திரியில் கொரானா வைரஸ் வார்டில் பணி புரிந்த இளம் நர்ஸ் உள்ளாடைகள் மட்டும் அணிந்து அதற்கு மேல் கவச உடை அணிந்து பணியாற்றிய விவகாரம் உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஷியாவில் இப்போது கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.இதன் காரணமாக அந்த இளம் நர்ஸ் ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரானா வைரஸ் வார்டில் பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார்.
அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. நர்ஸ் டூ பீஸ் உடை அணிந்து பணியாற்றிய ஆண்கள் வார்டில் எந்த புகாரும் வராததால் நர்ஸ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
அதே நேரத்தில் சமூக வலை...