வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: போலீஸ் ஒத்துழைப்பு இல்லை

நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை – நீதிபதிகள் அதிருப்தி

நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஒத்துழைப்பு இல்லை – நீதிபதிகள் அதிருப்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு இல்லை என்பதால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை கலெக்டர் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்தது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை, மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீசார் போதிய ஒத்துழைப்பு தரவில்லையென தெரிகிறது என்று நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனஎ. அத்துடன், தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்...