போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய அனுமதி பெற பெப்சிக்கு வர வேண்டும் என்ற செல்வமணிக்கு கடும் எதிர்ப்பு!
தமிழ் சினிமாவின் சுப்பீரியர் ஆபீசர் ஆகலாம் என ஆந்திராவில் போய் அமர்ந்து கொண்ட பெப்சி தலைவர் செல்வமணியின் ஒரு அறிவிப்பு தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் புகைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
கொரானா ஊரடங்கால் முடக்கி வைக்கப்பட்ட தமிழ் திரையுலகில் மீண்டும் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது தெரியாமல் இருக்கிறது.
இந்த சூழலில் அரசு பல்வேறு வகையான தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக திரையுலகில் போஸ்ட் புரொடக்சன் எனப்படும் ஷூட்டிங் பிந்தைய பணிகள் செய்ய அனுமதி தர தயாரிப்பாளர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை ஏற்று சில கட்டுப்பாடுகளுடன் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது.
இந்த சூழலில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் செய்வதற்கு தயாராகும் நிறுவனங்கள் அதன் விவரங்களை பெப்சிக்கு அனுப்பி உரிய அனுமதி பெற்று பணிகளை தொடங்க வேண்...