முள்ளிவாய்கால் பேரவலம்… விடுதலை களமே விடியலை படைக்கும் – திருமாவளவன் அறிக்கை
முள்ளிவாய்க்கால் பேரவலம்!
சர்வதேச சமூகத்தின் நல்லாதரவை வென்றெடுப்போம் !
விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை.
மே-18, ஈழமண்ணில் இனவழிப்புக் கொடூரம் நடந்தேறிய நாள். “யுத்தம் முடிந்தது; விடுதலைப்புலிகள் அழிந்தனர்” என்று இராஜபக்ஷே தலைமையிலான சிங்கள இனவெறி கும்பல் கொக்கரித்த நாள். பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன.
ஈழத்தமிழர் வாழ்வில் இன்னும் வெளிச்சக் கீற்று வெளிப்படவில்லை. இனக்கொலை மற்றும் போர்க்குற்றம் இழைத்த இராஜபக்சே கும்பல் இன்னும் விசாரிக்கப்படவும் தண்டிக்கப்படவும் இல்லை. மேலும் எஞ்சியுள்ள தமிழருக்கு மறுவாழ்வளிக்கவும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கான மறுகட்டமைப்பைச் செய்யவும் ஆளுங்கும்பல் எந்த முனைப்பையும் பெரிதாக மேற்கொள்ளவில்லை.
தமிழர் காணிகள் யாவும் சிங்கள இராணுவத்தினருக்கென ஆக்கிரமிப்புக்குள்ளாகி பெருமளவில் இராணுவமயமாகி வருகிறது. இராணுவக் குடும்பத்தினர் புலப்பெயர்...