உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!
உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!
சிஏஏக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.. குறிப்பாக சமீபத்தில் வெடித்த டெல்லி வன்முறை இந்திய மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சிறுபான்மையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லி சென்ற தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து சிஏஏ, என்பிஆர் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் சமீபத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டமாக மாறியதால் போலீசார் தடியடி நடத்தினர்.
அதை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தை தொடங்கியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது....