மாவட்ட, ஒன்றியங்களின் தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி!
மாவட்ட, ஒன்றியங்களின் தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி!
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளனர்.
இதையடுத்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதே தினத்தில் ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடக்கிறது.
பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் 9 மாவட்டங்களிலும் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களி...