ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைக்கும் முயற்சி – மருத்துவர் குழு தகவல்
ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைப்பது போல என்பதால் மாற்றுவழிகள் செய்ய சொன்னோம் மருத்துவர் குழு தகவல்.
தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வருவதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
நோய் தாக்கம் அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு முடக்கத்தை நீட்டிக்கவேண்டுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின்போது, கள நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழு விளக்கமாக தெரிவித்தது. அடுத்து மேற்கொள்ள வேண்டி...