சென்னையில் கொரானாவை ஒழிக்க கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!
கொரானா பிடியில் இருந்து சென்னையை மீட்க நாமே தீர்வு திட்டத்தை தொடங்கினார் மக்கள் நீதி மய்யத் தலைவர கமல்ஹாசன்.
ஜூன் 5ம் தேதியான இன்று உலக சுற்றுச் சூழல் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 'நாமே தீர்வு' என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இன்று உலக சுற்றுச் சூழல் தினம். உலகத்தைப் பசுமையாக மாற்றப் பல வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் நாம், இன்று நம் சென்னையையும் வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியதிருக்கிறது.
கரோனாவுக்கு எதிரான இன்று நடக்கும் போரில் என்ன செய்வார்கள் என்று காத்திருந்தும், ஏதாவது செய்வார்கள் என்று பார்த்திருந்தும் களைத்தவர்களின், நாமாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை தான் நாமே தீர்வு. இந்த நோயின் தீவிரத்தை மருத்துவர்கள் கட்டு...