தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் எம்.பி.ஆன துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன்… கல்வெட்டு சர்ச்சை…
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரபகவான் திருக்கோயில் அருகே உள்ளது காசி ஶ்ரீஅன்னபூரணி கோயில். தனியாருக்குச் சொந்தமான இக்கோயிலில் கடந்த 16-ம் தேதி வைக்கப்பட்ட கல்வெட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார் எனக் குறிப்பிட்டு கல்வெட்டு வைக்கப்பட்டதே அதற்கு காரணம்.
இந்த விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியதை அடுத்து, அவசர அவசரமாக கல்வெட்டு மறைக்கப்பட்டது.
இந்த நிலையில், அக்கோயிலின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
“குச்சனூர் காசி ஶ்ரீஅன்னபூரணி கோயில் கல்வெட்டு விவகாரம் நேற்று என் கவனத்துக்கு வந்தது.
இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறானது. என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது சட்டப்பட...