ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமணம்!
ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் பேரன் திருமணம்!
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூரு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது.
கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஹெச்.டி.குமாரசாமியின் மகன் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது.
கர்நாடகா மாநில அரசு சார்பில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
திருமண இடம் அமைந்துள்ள ராமநகரத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் குமாரசாமி குடும்பத்தின் பிரமாண்டமான திருமணத்தில் பங்கேற்க சுமார் 30-40 கார்கள் பெங்களூரிலிருந்து திருமண மண்டபத்தை நோ...