சீனாவில் கொரானா தாக்குதலை அடுத்து ஹாண்டா வைரஸ் தாக்கி ஒருவர் பலி – அதிர்ச்சியில் உலக நாடுகள்
சீனாவில் கொரானா தாக்குதலை அடுத்து ஹாண்டா வைரஸ் தாக்கம் - அதிர்ச்சியில் உலக நாடுகள்
உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் உயிர்பலிகளையும் ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையாக போராடி வரும் நிலையில் அதே சீனாவில் மீண்டும் ஒரு உயிர்க் கொல்லி வைரஸ் ஆக ஹாண்டா என்ற புதியவகை தொற்று நோய்கிருமி தாக்கம் தொடங்கி உள்ளதாம்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
அவரை பரிசோதித்த டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் அவருக்கு ஹாண்டா வைரஸ் தாக்குதல் இருந்தது தெரியவந்துள்ளது.
இவர் பயணம் செய்த பேருந்தில், அவரோடு இருந்த 32 பயணிகளுக்கும் இந்த நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த வைரஸ் எலிகளிடமிருந்து பரவியிருக்கும் என்று கூறப்படுக...