வாங்குவது 1.5 லட்சம் கணக்கில் காட்டுவது ரூ.354 டப்பிங் சங்கத்தில் பல கோடி ஸ்வாகா… ராதாரவி மீது தொடரும் புகார்!
தென்னிந்திய டப்பிங் யூனியனில் உறுப்பினர் சேர்க்கைக்கு ஆள் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் வாங்கிக் கொண்டு கணக்கில் ரூ.324 என்று குறிப்பிட்டு பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்னிந்திய டப்பிங் யூனியன் தலைவராக நடிகர் ராதாரவி பதவி வகிக்கிறார். இவர் மீது ஏற்கனவே நடிகர் சங்க நிலத்தை மோசடியாக விற்ற வகையில் நில மோசடி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. பண மோசடி, நில மோசடி வழக்கில் காஞ்சிபுரம் போலீசில் குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில் ராதாரவி எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று கூறப்பட்ட போது திடீரென மத்தியில் ஆளும் பி.ஜே.பி கட்சியில் போய் சேர்ந்தார் ராதாரவி.
நடிகர் சங்க வழக்கின் நிலை கேள்விக்குறி ஆன நிலையில் டப்பிங் யூனியனில் உறுப்பினர்கள் சேர்க்கையில் பல கோடி ரூபாய் மோசடி நடப்பதாகவும், உறுப்பினர் சேர்க்கைக்கு பெறப்படும் தொகையை கணக்கில் காட்டாமல் ...