CBI விசாரணை என்பது அரசின் கொள்கை முடிவு அதற்கு கோர்ட் அனுமதி தேவையில்லை – மதுரை கோர்ட்
சாத்தான்குளம் அப்பா,மகன் மரண விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோர்ட்டில் தமிழக அரசு முறையீடு!
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்தாக போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது இருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 20ம் தேதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
ஆனால், 22ம் தேதி இரவு பென்னிக்சும், 23ம் தேதி அதிகாலை ஜெயராஜும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவரின் உடல்களிலும் ரத்தக்காயங்கள் இருந்தன. போலீசார் அடித்துக்கொன்றதாக குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உயர்நீத...