கைலாசம் அமைந்தது… எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை – நித்தி ஓப்பன் டாக்
கைலாசம் அமைந்தது... எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை - நித்தி ஓப்பன் டாக்
தமிழ் நாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இனிமேல் தமிழ்நாட்டிற்கு வரபோவதில்லை என்றும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
ஒரு புறம் நீதிமன்றத்தின் கைது வாரண்ட், மறுபுறம் கைது செய்வதற்காய் தேடி கொண்டிருக்கும் காவல்துறை என சிக்கலில் இருந்தாலும், தினம் தோறும் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலமாக தனது பக்தர்களை சந்திக்க நித்தியானந்தா தவறுவதில்லை. அந்த வகையில், அண்மையில் பக்தர்களுக்காக பேசிய சாமியார் நித்தியானந்தா, கைலாசத்திற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகால போராட்டத்திற்கு
கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும்...