நாடோடி காதல் தேறுமா “ஜிப்ஸி” விமர்சனம்
காஷ்மீர் போரில் பெற்றவர்களை பறி கொடுத்து அனாதையாக நிற்கும் ஜிப்ஸியை திருவிழாக்களில் குதிரை வைத்து வேடிக்கை காட்டும் ஒருவர் வளர்க்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் இறந்து போக குதிரையோடு நாடோடியாக ஊர் ஊராக போகிறார். பாட்டுப்பாடுகிறார்.
அப்படி குதிரைக்கார தெருப்பாடகனாக மாறிய ஜிப்ஸி நாகூர் வருகிறார். அங்கே இஸ்லாமிய மத கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்து பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணுக்கு விடிந்தால் திருமணம் என்ற சூழலில் அந்த பெண்ணோடு ஊரைவிட்டே ஓடி வேறொரு ஊரில் இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்கிறார் ஜிப்ஸி.
மனைவி கர்ப்பிணி ஆக இருக்கும் போது அந்த ஊரில் மதக்கலவரம் ஏற்படுகிறது. அதில் மனைவியை பிரியும் ஜிப்ஸியை போலீஸ் பிடித்து செல்கிறது. கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா இதுதான் ஜிப்ஸி கதை.
புரட்சிகரமான தெருப்பாடகன் என்று ஜிப்ஸியான ஜீவாவை அடையாளம் காட்டும் இயக்க...