கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை !.
கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை அளித்தார்.
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திரையுலக தரப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் 10 லட்சம் நிதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள, முதல் அமைச்சர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சம், திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு தலா 2.5 லட்சம் என ரூ.1 கோடியே 32.5 லட்சம் ரூபாய் நிதியை நன்கொடையாக நடிகர் அஜித்குமார் வழங்க...