வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: பள்ளிகள் திறப்பு

1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறப்பு!

1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 2022-23-ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் அவர்களுக்கு ஆரம்பாகிறது. கடந்த 2 கல்வியாண்டுகளுக்கு பிறகு, வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடக்க உள்ளன. காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணையை கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. ஆனால் இது திட்டமிடலுக்கான நேரம்தான் என்றும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் அமைவிடம், வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ...
நாளை முதல் பள்ளிகள் திறப்பு!

நாளை முதல் பள்ளிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. பள்ளிக் கூடங்களில் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு வகுப்புகள், நாளை தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்குகின்றன. இதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கியதும் இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வகுப்புகள் த...
தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் தொற்றின் நிலையை பொறுத்து தளர்வுகளை அனுமதிக்கலாமா என சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இந்த கூ...
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!

19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்! கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடரந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு  நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதன்படி கொரோனா நெறிமுறைகளுடன் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் மாணவ -மாணவிகள...
பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை- பள்ளி கல்வித்துறை அமைச்சர்!

பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை- பள்ளி கல்வித்துறை அமைச்சர்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை- பள்ளி கல்வித்துறை அமைச்சர்! திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திரா, என்.என்.எஸ். திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்திய 75-வது ஆண்டு சுதந்திர தின ஓட்டம், இன்று(சனிக்கிழமை) நடந்தது. திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் பழைய தபால் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவுதூண் பகுதியில் விழா நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓட்டப் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்தமாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே அனைத்து மாவட்டகல்வி அதிகாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினி...
ஜூலையில் பள்ளிகள் திறக்கலாமாம்… அதுவும் 8முதல் 12வரை மட்டுமே…

ஜூலையில் பள்ளிகள் திறக்கலாமாம்… அதுவும் 8முதல் 12வரை மட்டுமே…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    8 முதல் 12ம் வகுப்புகள் ஜூலையில் தொடங்கலாம்! மனித வள மேம்பாட்டு துறையிடம் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றன. இதற்கிடையே பள்ளிகளை மீண்டும் எப்போது திறப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குழு சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த குழு தனது அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறையிடம் அளித்துள்ளது. அதன்படி பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை கோடை விடுமுறைக்கு பின்பு ஜூலை மாத மத்தியில் திறக்கலாம்” என்று பரிந்துரைத்துள்ளது. ...