புரட்சிக்கு முயற்சித்த ராணுவ தளபதியை வெட்டி உயிரோடு மீன்களுக்கு இரையாக்கி மரண தண்டனை கொடுத்த வட கொரிய அதிபர் கிம்…
இராணுவ புரட்சிக்கு முயற்சித்த தளபதியை வெட்டி உயிரோடு மீன்களுக்கு இரையாக்கி "ஜேம்ஸ் பாண்ட்" பட பாணியில் கொடூரமான மரண தண்டனை வழங்கிய வட கொரியா அதிபர் கிம்.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதிலும், மீண்டும் வேறு யாரும் தனக்கு எதிராக செயல்படக்கூடாது என எச்சரிக்கும் விதமாக கொடூரமான முறையில் மரண தண்டனையை வழங்கி வருகிறார். தந்தையின் மறைவுக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கிம் ஜாங் அன், இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரண தண்டனை அளித்து இருக்கிறார்.
தனது உரையின் போது சத்தமாக கைதட்டவில்லை என்பதற்காக தனது சொந்த மாமாவையே பீரங்கிகளை தகர்க்க பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு மூலம் சுட்டு கொலை செய்துள்ளார்.
...