கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்!
கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்!
வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் 2021 பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது.
இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறை டி.ஜ.ஜி.யாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி, சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டிருந்ததாகவும், இதற்காக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவருக்கு ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டார். இது கர்நாடகம், தமிழகம் தாண்டி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து அப்போது முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, ஓய்வு ...