தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா தமிழக அரசு?!
தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா தமிழக அரசு?!
கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரம் கொரானாவுக்கு சிகிச்சை அளிக்கும் அனுமதி தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது.
பிரபலமான பல தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்ட நிலையில் திடீரென ஒரு தனியார் தொலைக்காட்சியில் தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கொரானா சிகிச்சை அனுமதிக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் என்றும் நாளொன்றுக்கு ரூம் வாடகை சில லட்சங்கள் என்றும், மருத்துவ உடைக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் என்றும் வசூலிக்கப்பட்ட விவரத்தை ரகசிய கேமரா வைத்து படம் பிடித்து அம்பலப்படுத்தியது.
ஆரம்பத்தில் சிகிச்சை அளிக்க மறுத்து பயந்து ஒதுங்கிய தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் இப்போது திடீரென சிகிச்சை கட்டணமாக பல லட்சங்களை பகிரங்கமா...