“மாஸ்டர்” விஜய் வாய்க்கு பூட்டு போட மீண்டும் ரெய்டு மிரட்டலா?!
"மாஸ்டர்" விஜய் வாய்க்கு பூட்டு போட மீண்டும் ரெய்டு மிரட்டலா?!
நடிகர் விஜய் சமீபத்திய படங்கள் எல்லாம் ரிலீஸ் நேரத்தில் பெரும் சர்ச்சையை எதிர் கொள்ளும்.
குறிப்பாக சமீபத்திய பட ரிலீசுக்கு முன் நடைபெறும் ஆடியோ விழாவில் விஜய் சொல்லும் குட்டிக்கதையும் இந்த பரபரப்புக்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால் மாஸ்டர் படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே படக்குழுவும், விஜய்யும் தொடர்ந்து ஏதாவது பரபரப்புகளுக்கு சிக்கி வருகிறார்கள்.
நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை திடீரென ஷூட்டிங்கை நிறுத்தி வைத்து விஜய்யை ஒரு கிரிமினல் குற்றவாளி போல காரில் அழைத்து சென்று 48 மணி நேரம் வெளியுலக தொடர்புகளை தடுத்து ரெய்டு நடத்தி கடைசியில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றாமல் கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெய்டுக்கு காரணம் விஜய் மீதான ஆட்சியாளர்களின் பயம் என்ற கருத்தும் உலாவராமல் இல்லை.
இந...