வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து!
வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து!
வெட்டுக்கிளிகள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தற்போது இந்தியா நோக்கி படையெடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிகமான அளவில் பரவி உள்ளது.
இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பயிர்களை நாசமாக்கிவிட வாய்ப்புள்ளதால் அதை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெட்டுக்கிளிகளால் விமானத்தை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்காக வெட்டுக்கிளிகள் படையெடுப்பதால் விமானம் தரையிறங்கும்போது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக இருக்கும். இதனல் விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் (DGCA) விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங...