ஓ.பி.எஸ். மகன் வெற்றி முறைகேடால் கிடைத்தது என குற்றம்சாட்டி வழக்கு தொடர இளங்கோவன் முடிவு
தேனி தொகுதியில் அதிக அளவில் முறைகேடு நடந்ததற்காக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்கிறார் இளங்கோவன்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றிக்காக உழைத்த கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடு முழுவதும் அதிகார பலம், பண பலத்தால் மோடி வெற்றி பெறுள்ளார்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அதிகாரபலம், பணபலத்தால் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
எனினும் தேனியில் 4½ லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓ...