இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ்வரை வார விடுமுறை அறிவித்து ஆந்திர முதல்வர் பரபரப்பு..!
ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி நடவடிக்கைகள், உத்தரவுகளை பிறப்பித்து நாடு முழுதும் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.
இப்போது அதிரடியாக போலீசாருக்கு வார விடுமுறை அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பதவி ஏற்றதும் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார்.
விவசாயிகளுக்காக 'ரையத் பரோசா' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.12,500 சலுகை பெறுவார்கள் என அறிவித்தார்.
இதனையடுத்து 5 துணை முதல்வர்களை நாட்டிலேயே முதன்முறையாக நியமித்தார். 25 கேபினட் அமைச்சர்களையும் நியமனம் செய்தார். அடுத்த அதிரடியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் என அறிவித்தார்.
மேல...