வன்முறையும் ஆபாசமும் அதிகம் இருப்பதால் OTT டிஜிட்டல் தளங்களுக்கும் சென்சார் அவசியம் – பிரதமருக்கு பீகார் முதல்வர் கடிதம்
வன்முறையும் ஆபாசமும் அதிகம் இருப்பதால் OTT டிஜிட்டல் தளங்களுக்கும் சென்சார் அவசியம் - பிரதமருக்கு பீகார் முதல்வர் கடிதம்
சென்சார் இல்லாமல் OTT டிஜிட்டல் தளங்களில் ரிலீசாகும் தொடர்களால் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது .
திரைப்படங்கள் திரையரங்குகளில் மட்டுமே வெளியான காலம் மாறி இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணைய உலகில் டிஜிட்டல் தளங்களிலும் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன.
தியேட்டரில் வெளியாகும் எல்லா படைப்புகளும் அரசின் தணிக்கைக்கு பிறகே ரிலீஸ் ஆகும்.
ஆனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை அவசியமில்லை என்ற நிலையே இப்போது வரை உள்ளது. அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் வலைதளங்களில் வெப்சீரிஸ் மட்டுமே அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரானா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கமுடியாத நிலை தற்போது நிலவு...