குழந்தை திருமணம், பெண் கல்வி, குலதெய்வ சடங்குகளை வெளிச்சம் போடுகிறதா அயலி? – கோடங்கி விமர்சனம்
ஜி5 ஓடிடி தளத்தில் கடந்தாண்டு வெளியான விலங்கு வெப் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே வரிசையில், முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ள அயலி என்ற தொடர் தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது.
8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் மொத்தமாக நான்கு மணி நேரங்களாக தயாராகியுள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர்.
கதைப்படி, 1990-களில் புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் அயலி என்ற பெண் தெய்வத்தை அந்த ஊர் மக்கள் வணங்கி வருகின்றனர். வயதுக்கு வந்த உடனேயே பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அந்த ஊரில் காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் அந்த ஊரில் எந்த ஒரு பெண்ணும் பத்தாம் வகுப்பு படித்ததே இல்லை என்ற நில...
ஓடிடிக்கு போற தனுஷ் படமெல்லாம் இப்படித்தான் இருக்கும் போல... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல வந்த ஜகமே தந்திரம் இப்படித்தான் ஓவர் பில்டப்புல வந்து ஓடிடி போய் போன வேகத்துல அமுங்கி போச்சி... அடுத்ததா இந்த மாறன்...
கதைப்படி தனுஷின் அப்பாவான நேர்மையான பத்திரிகையாளர் ராம்கி ஒரு உண்மை செய்தி போட்டதால கொல்லப்படுறார்... அதே நாளில் அம்மாவும் பிரசவத்துல பெண் குழந்தைய பெத்து குடுத்துட்டு செத்துப்போறாங்க... அப்பா அம்மா இல்லமலேயே தங்கச்சிய தனுஷ் வளர்த்து ஆளாக்குறார்.
தனுஷும் நேர்மையான பத்திரிகையாளரா இருக்கார். அரசியல்வாதியான வில்லன் சமுத்திரகனியோட ஒரு உண்மைய தனுஷ் கண்டு புடிச்சதால வில்லனால ஆபத்து, இடையிலயே அமீர் ஒரு வில்லனா வரார்... திடீர்னு தங்கச்சிய யாரோ கடத்துறாங்க... தனுஷ் தங்கச்சிய காப்பாத்துனாரா... வில்லன் என்ன ஆனார்... இதுதான் மாறன் கதை...
சரி இவ்ளோ நேரம் கதைன்னு சொன்னதுல...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் குக் வித் கோமாளி 3வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ,
சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 படப்பிடிப்பு துவங்கியது என தகவல் வெளிவந்தது.
ஆனால் இதில் யார்யாரெல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள் என்று எந்த தகவலும் வெளிவராத நிலையில்,
தற்போது காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.
இதில், பாரதி கண்ணம்மா ரோஷினி, நடிகர் சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன்,
அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், உள்ளிட்டோர் போட்டியாளர்களாக ...
’வாழ்’ திரை விமர்சனம்
மனித வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் போராடிக்கொண்டே வாழ்கிறான்.
அப்படி ஒரு மிஷின் வாழ்க்கையில் வாழும் கதை நாயகன் ப்ரதீப் ஒரு நாள் அவரே எதிர்ப்பார்க்காத ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவர் சந்தித்த மக்கள், இடங்கள், அனுபவங்களே இப்படத்தின் வாழ் பட கதை.
அருவி மூலம் இப்படியும்கதை சொல்ல முடியும் என தமிழ் திரையுலகைதிரும்பிப்பார்க்க வைத்த இயக்குனர் அருண் பிரபுவின் அடுத்த படைப்புதான் இந்த வாழ்.
சிவகார்த்திகேயன் படத்தைதயாரிக்க முன் வந்த போதே ஒரு எதிர் பார்ப்பு இருந்தது.
உலக சினிமாக்களில் இது போன்ற ட்ராவல் கதைகள் நிறைய வந்துள்ளது.
அதேபோல் ஒரு ட்ராவல் கதை என்றாலும் அதை நம் தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி நமக்கு காட்டிய விதம் நன்று. படத்தின் நாயகன் ப்ரதீப் கண்டிப்பாக வரவேற்க கூடிய டேலண்ட், அவரின் கதாபாத்திரத்தை அருமையா...
ஆண் தேவதை விமர்சனம்
தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகியிருக்கிற படம் ஆண்தேவதை.
படத்தலைப்பே மிக கவிதையாக இருப்பதால் படமும் அப்படியே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
கை நிறைய சம்பாதிக்கும் ஐடி நிறுவன ஊழியர்களின் உண்மையான வாழ்க்கையை வெளிச்சம் போட நினைத்திருக்கிறார் இயக்குனர் தாமிரா.
பணமும், பகட்டும், மேலைநாட்டு கலாச்சாரமும்தான் வாழ்க்கையின் அங்கீகாரம் என நினைக்கிற கதாநாயகி... சமூக அக்கறை, குழந்தைகள், அளவான வருமானம், அமைதியான வாழ்க்கை, மகிழ்ச்சியான குடும்பம் என வாழ நினைக்கும் கதாநாயகன்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை எப்படி அமைகிறது எப்படி அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் இன்றைய சூழலை எடுத்து காட்டுகிறார் இயக்குனர்.
மிக யதார்த்தமான கதையை சமூகத்தில் நடக்கும் அவலத்தை அதே சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாக செல்ல நினை...
ரொம்ப நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் யதார்த்தங்களும், வாழ்வியல் நிஜங்களும் திரைப்படங்களாக வந்து உலக சினிமாவுக்கு தமிழ் சினிமாவும் சளைத்தது இல்லை என குரல் எழுப்ப தொடங்கியிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி சமீபத்திய பரியேறும் பெருமாள் படம்வரைக்கும் பல படங்கள் இந்த வாழ்வியல் வலியை ரத்தமும் சதையுமான மனிதர்களின் நிஜத்தை செல்லுலாய்டில் பதித்து கண்முன்பாக நிறுத்தியது.
அந்த வரிசையில் இணைந்திருக்கிற படம் மனுசங்கடா.... பிழைப்புக்காக கிராமத்தில் இருந்து சென்னையில் வேலை செய்கிற மகன்... ஒரு நள்ளிரவில் திடீரென அப்பா இறந்து விட்டதாக தகவல் வருகிறது. அவசர அவரசமாக கிராமத்துக்கு வருகிறான் மகன். அங்கே இறந்து கிடக்கும் அப்பாவின் உடலை அடக்கம் செய்ய பொதுப்பாதையை பயன்படுத்தக் கூடாது ஆதீக்க ஜாதியினர் தடுக்கிறார்கள்.
உடலை அடக்கம் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு சட்டப்படி போ...