நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசுப் பேருந்துகளைப் படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஊழல் மற்றும் அரசின் நிர்வாக திறமையின்மையை மறைக்க மக்கள் சேவை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
முதற்கட்டமாக சென்னையில் 1000 பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வரும் செய்திகள் பொது மக்களிடத்திலும், போக்கு வரத்து ஊழியர்களிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துத் துறையைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அவை லாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்பதால் பயணிகள் அதிகம் இல்லாத சிறிய கிராமங்களுக்குப் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் பேராபத்து ஏற்படக்கூடும்.
மேலும்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் மாற்று கட்சிகளை சார்ந்த 60-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா அரியக்குடியில் நடந்தது.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி செயலாளர் சாயல்ராம் தலைமை தாங்கினார். தற்போது ஆளும் தி.மு.க. அரசு எதை சாதித்து விட்டது? ஓராண்டு சாதனை என எதற்கு இந்த விளம்பரம்? பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு மற்றவர்களுக்கு பல மடங்கு கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள்.
ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கும், ஊழல் குற்றச்சாட்டு கூறுவதற்கும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது? பிரான்ஸ் நாட்டிடம் வாங்கிய ரபேல் விமான ஊழல் வழக்கின்போது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்த கோப்புகளை காணவில்லை என்று கூறினீர்களே.
கோப்புகளையே பாதுகாக்க முடியாத நீங்களா நாட்டை பாதுகாப்பீர்கள்?
கேரளாவில் அரசு ப...
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்கு
ரயில்வே துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி எந்திரங்களை கொண்டு வந்தனர்
பொதுமக்கள் வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும் அல்லது தமிழக அரசால் மாற்று இடம் வழங்குவதற்கு உறுதி அளித்தால் மட்டுமே தற்போது உள்ள வீடுகளை அகற்றுவதற்கு அனுமதி அளிப்போம் என்று கூறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களை சந்தித்து பேசி வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து...
பாஜகவின் முழு சங்கியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை கூறியும்,
சீமானை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் கூண்டோடு ராஜினாமா செய்த நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர்,
நாம் தமிழகர் கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் ராஜசேகரன் இளைஞர் பாசறை செயலாளர் இமானுவேல் பழனி தொகுதி செயலாளர் ஈஸ்வரன் தொழிற்சங்க செயலாளர் டேவிட் உட்பட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்டவர்கள்,
நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு காலி செய்து திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் தங்களை திமுகவ...