பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்… நெருக்கடியில் சீனா!
பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்... நெருக்கடியில் சீனா!
ஐ..நா.-வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், மே 22-ம்தேதி பதவியேற்க உள்ளதாகவும் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குவார்....