செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

செய்திகள்

டாப்சி’ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மன்சூர் அலிகான்

டாப்சி’ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மன்சூர் அலிகான்

சினி நிகழ்வுகள், செய்திகள்
‘பெப்சி’ அமைப்புக்கு மாற்றாக சில ஆண்டுகளுக்கு முன்பு மன்சூர் அலிகான் தொடங்கிய ‘டாப்சி’ அமைப்பின் தலைவர் பதவியை உதறினார் மன்சூர். தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ‘பெப்சி’ என்ற கூட்டமைப்பின் மூலம் செயல்பட்டு வந்தனர். பெப்சி அமைப்பினரின் ஆதரவு இல்லாமல் எந்த பெரிய நடிகரின் படமும் படபிடிப்புகளை நடத்த முடியாத சூழல் நிலவி வந்தது. இதன் மூலம் சிறு பட தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த சூழலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர், தயாரிப்பாளர் மன்சூர் அலிகான் ‘அதிரடி’ என்ற படத்தை தொடங்கினார். அப்போது ‘பெப்சி’ தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மன்சூர் அலிகான் தலைமையில் ‘டாப்சி’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் உறுப்பினகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில், சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் திடீரென ஒரு அறிக்...
Thondan Movie Team Paid Tribute To K Balachander Photos

Thondan Movie Team Paid Tribute To K Balachander Photos

சினி நிகழ்வுகள், செய்திகள்
Please Find Below Press Release and Attached Stills Of Thondan Movie Team Paid Tribute To Iyakunar Sigaram K Balachander On 2nd Year Memorial Anniversary At Thondan Shooting Spot. இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள் தயாரித்து இயக்கும் "தொண்டன்" படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி.  திரு சமுத்திரக்கனி அவர்கள் இயக்குநர் சிகரம் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். படப்பிடிப்பு குழுவினரும் மலர் தூவி மரியாதை செய்தனர்....
The word ‘U’ looks bigger in p’U’riyaadha p’U’dhir

The word ‘U’ looks bigger in p’U’riyaadha p’U’dhir

செய்திகள்
Vijay Sethupathi’s next film ‘Puriyaadha Pudhir’, directed by debutante Renjit Jeyakodi is all set to release on 13th January 2017. Produced by Rebel Studios, the most anticipated flick has been distributed by J Satish Kumar under the banner JSK Film Corporation. “Normally U certificate is considered as high value in terms of tax exception. Apart from that, that symbol "U" is an indication of the commitment of the audience to the film.  Now we have obtained that prestigious U from the censor board, jointly with rebel studios.  Pongal holidays are a sort of get together for the families and what better than a film that will keep the audience hooked to the seats. 13th of January is the day we have marked as the release date. Iam indeed very excited about the tremondous interest Puriyatha Pu...
சினி நிகழ்வுகள், செய்திகள்
  THE MAMMOTH REALMS OF ‘BAASHA’ EXPANDS THE KINGDOM WITH HEAVY DOWNPOUR OF TREMENDOUS RESPONSE AND BUSINESS ENQUIRIES Epics are ageless! But there are few EPICS that offer Goosebumps not just when viewed on the screens, but merely with a word. That’s how the inevitable realms of ‘Heroic Epics’ in Cinema are defined and undoubtedly, ‘BAASHA’ is the word that incessantly involves your senses go through perpetual excitements. Crossing more than couple of decades, the Superstar Rajinikanth high volatile action drama remains to be everyone’s cherry-pick. A blunt illustration for this could be when the film is aired on satellite channels for the n-th time and you walk down the streets to hear every TV box resonating the film’s sound on high volume. That’s an inevitable power that ‘BAAS...
கடைசி வரை மக்களை சிரிக்க வைப்பதே என் ஆசை: வடிவேலு

கடைசி வரை மக்களை சிரிக்க வைப்பதே என் ஆசை: வடிவேலு

செய்திகள்
விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, நடித்துள்ள படம் ‘கத்திச்சண்டை’. இதை சுராஜ் இயக்கி இருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். வருகிற 23-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் பேசிய வடிவேலு... “மக்கள் முகத்தில் கொஞ்ச நாட்களாகவே சிரிப்பை பார்க்க முடியவில்லை. துன்பத்தையும், துயரத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கிறதுக்கே சங்கடமாக இருக்குது. மக்கள் கஷ்டப்படும் போது படத்தை விட வேண்டாம் என்றுதான் ‘கத்திச்சண்டை’ ரிலீசை தள்ளி வைத்தோம். கொஞ்ச நாளுக்கு பிறகு ‘ரிலீஸ்’ பண்ணலாமுன்னு இருந்தோம். இப்ப நாமாவது மக்களை சிரிக்க வைப்போம் என்று ‘கத்திச்சண்டை’ படத்தை ரிலீஸ் செய்கிறோம். கடைசிவரை மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஒரே மாதிரி நடித்தால் மக்களுக்கு போரடித்து விடும். அதனால் தான் விதம் ...
கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது: டாப்சி

கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது: டாப்சி

செய்திகள்
“நான் விருப்பப்பட்டு சினிமாவுக்கு வரவில்லை. மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதில் ஈடுபட்டேன். அதன்மூலம் சினிமா வாய்ப்பு வந்தது. அப்போதும் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடித்தேன். ஒருகட்டத்தில் சினிமா பிடித்தது. அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டேன். எனக்கு தன்னம்பிகை அதிகம். எதற்கும் பயப்படமாட்டேன். மாடலிங் செய்தபோது எனது தந்தை தூக்கம் இன்றி தவித்தார். மற்றவர்கள் தவறாக பேசுவார்களோ என்று பயந்தார். எனது படங்கள் விளம்பரங்களில் வெளியாகி நண்பர்கள் அவரை பாராட்டிய பிறகுதான் நிம்மதியானார். சுற்றி இருப்பவர்களுக்கு பயந்துதான் பெற்றோர்கள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் வளர்க்கிறார்கள். நானும் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தே வந்து இருக்கிறேன். பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது வரை வெளியுலகம் பற்றி எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வந்த பிற...
நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்தது

செய்திகள்
கரீனா கபூர் கடந்த 2012-ம் ஆண்டில், இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், அவர் கர்ப்பமானார். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. நிறைமாத கர்ப்பமாக இருந்த அவரை பிரசவத்துக்காக மும்பை பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு நேற்று காலை 7 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, ‘தைமுர் அலிகான் பட்டோடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். குழந்தை பிறந்தது பற்றி கரீனா கபூர்-சயீப் அலிகான் ஆகிய இருவரும் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:- “எங்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் குழந்தைக்கு தைமுர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டியிருக்கிறோம். கடந்த 9 மாதங்களாக எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் நலம் வ...
நடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா?: நடிகர் ராணா பேட்டி

நடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா?: நடிகர் ராணா பேட்டி

செய்திகள்
திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த வருடம் திரிஷாவுக்கு பட அதிபருடன் திருமணம் நிச்சயமாகி திடீரென்று ரத்தானது. இந்த நிலையில் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் பே...
சினிமாவில் இருந்து என்னை ஒதுக்குகிறார்கள்: இலியானா வருத்தம்

சினிமாவில் இருந்து என்னை ஒதுக்குகிறார்கள்: இலியானா வருத்தம்

செய்திகள்
விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இலியானாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. 2 இந்தி படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. ஆஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைகளுக்கு பிறகு டைரக்டர்கள் அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள். சமூக வலைத்தளங்களில் தனது நீச்சல் உடை படங்களை அவர் பரவ விட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் இலியானா வருத்தத்தில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “கடந்த 2 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் எனக்கு படங்கள் இல்லை. இந்தியில் மட்டுமே ஓரிரு படங்களில் நடிக்கிறேன். டைரக்டர்கள் என்னை ஒதுக்குகிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் இதுதான் எனக்கு கடைசி படம் என்ற உணர்விலேயே நடிக்க வேண்டி உள்ளது. தென்னிந்திய மொழியில் ஒரு பட வாய்ப்பு வந்தது. டைரக்டர் கதையை சொல்லிவிட்டு நான்தான் கதாநாய...