ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,488.50 கோடி கடன் நிலுவையில் இருப்பதாக மேயர் பிரியா தகவல்
"ரூ.3,065.65 கோடி கடன் இருந்த நிலையில் அதில் ரூ.1,577.10 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது; ரூ.1,488,50 கோடி கடனுக்கு வட்டி மட்டும் ரூ.8.5 கோடி செலுத்தப்பட்டு வருகிறது.
விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!
நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார்.
வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது சீமான் ஆஜராகி உள்ளார். காவல் நிலையம் வரை சீமானின் காரை அனுமதிக்க வேண்டும் என காவல் துறையுடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமானின் காரை மட்டும் அனுமதித்த காவல்துறை, மற்ற கார்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே கூடியுள்ள நாதகவினர் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் நாதகவினர்-காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணைக்கு ஆஜராகியுள்ள சீமானிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற காவல் துறை திட்டமிட்டுள்ளது.
சீமான் ஆஜராவதைய...
சீமானின் “பிசுறு” பேச்சால் ஒதுங்கியிருந்த காளியம்மாள் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து விலகல்!
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக விலகியே இருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகி கொள்ளட்டும் என பேசினார்.
இந்நிலையில் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்த...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு போயஸ்கார்டனில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர் தூவி நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
அரசியலில் இருந்த ஜெயலலிதாவுக்கும், அரசியலுக்கு வரலாம் என்றிருந்த ரஜினிக்கும் பல முரண்கள் இருந்தது. பல முறை ஜெயலலிதாவை நடிகர் ரஜினிகாந்த கடுமையாக விமர்சித்த வரலாறும் உண்டு. அப்படி இருக்கும் சூழலில் ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆகிற நிலையில் எந்த ஆண்டும் இப்படி ஜெயலலிதா வீட்டுக்கு ரஜினி சென்று மரியாதை செலுத்தியது இல்லை. இந்த ஆண்டு யாரும் எதிர்பாராதவிதமாக ஜெயலலிதா வீட்டுக்கு ரஜினி சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியது தமிழ் நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
...
சேலம் வேங்கை அய்யனார்
நடிகர், தயாரிப்பாளர் இவர் விஜய் நடித்த 'சர்க்கார்' படத்தில் தேனீ விவசாய வேட்பாளராக நடித்தவர். மாஸ்டர் மகேந்திரன் மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் 'கரா' படத்தில் தாதா வேடத்தில் நடித்துள்ளார். அம்மா ராஜசேகர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்'தல' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் 'வெட்டு' என்ற பெயரில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் காட்டுவாசி சமூகத்தின் தலைவராக நடித்துள்ளார். விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் 'நொடிக்கு நொடி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
சேலம் வேங்கை அய்யனார் நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட. தனது ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் தயாரிப்பில் 'என்டர் தி டிராகன்' என்ற படத்தை தமிழில் எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு ஆகியோர...
விஜய்க்கு ஒய் பாதுகாப்பு கரிசனமா? கடிவாளமா?
நடிகராக இருக்கும் விஜய் இப்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்.
2026 ஆட்சியை பிடிப்போம் என்ற முழக்கத்தோடு செயல்படும் விஜய் யாருடைய தூண்டுதலாலேயே அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று ஒரு சாராரும், பாஜகவின் பி டீம் இவர் என ஒரு சாராரும், திமுகவுக்கு மாற்று விஜய் தான் என அவர் தரப்பும் சொல்லி வருகிறார்கள்.
இந்த சூழலில் பனையூர் பங்களாவை விட்டு பெரும்பாலும் வெளியே அரசியல் செய்யாத விஜய் அந்த இட்த்தில் இருந்தே அரசியல் செய்வது கடும் விமர்சனத்திற்கு உள்ளானாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் தன் விருப்பம் போல செயல்படுகிறார்.
சமீபத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை தனது பனையூர் பங்களாவுக்கு வரவைத்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது...
தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வான 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார், கமல்ஹாசன் பங்கேற்கிறார்
முன்னணி தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI), சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ள 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.
தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. துவக்க விழாவில் துணை முதல்வருடன்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய "கலைஞர் 100" நூல்!
தமிழ் திரையுலகின் முதல் பொதுஜன தொடர்பாளர் என்கிற பெருமைக்குரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பேசும் படம் தொடங்கியது முதல் அவர் மறையும் வரையிலான திரைப்பட புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து "சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு" என்கிற நூலினை தமிழக அரசின் உதவியுடன் வெளியிட்டார்.
தமிழ்த் திரையுலகின் தகவல் களஞ்சியமாக திகழும் அந்தப் புத்தகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு முக்கியமான நூலாகும்.
தமிழ் திரையுலைகில் வசனகர்த்தவாக, பாடல் ஆசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக சரித்திரம் படைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.
அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் 'கலைஞர் 100' என்கிற நூலாக மல...
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' அரசியல் திரில்லர் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது
தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், ரவி மோகன் ஜோடியாக அறிமுகமாகிறார்
பல வெற்றிப் படங்களையும் 'மத்தகம்' இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.
சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிம...
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலு...