வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

World News

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள்

CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகைகள்
  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள் நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை ஆகியவை தான்.. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு என்று உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் உண்டு. ஒரு பக்கம் நம் தமிழ் இசையமைப்பாளர்கள் நாடு கடந்து சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சினிமாவின் மேன்மையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அயல்நாடு வாழ் தமிழர்கள் நம் தமிழ் பாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், பலரும் தங்களைச் சிறந்த பாடகர்களாக உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி துபாயில் வாழும் நம் தமிழ் மக்களும் இப்படி...
ஹாலிவுட்டில் இடம்பெற்ற “ஜவான்” தமிழ் இயக்குநராக சாதனைப் படைத்த அட்லி

ஹாலிவுட்டில் இடம்பெற்ற “ஜவான்” தமிழ் இயக்குநராக சாதனைப் படைத்த அட்லி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி. தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்திரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ் சினிமா வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, “ஜவான்” மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் அட்லி. ராஜா ராணி ப்ளாக்பஸ்டர் வெற்றி மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய அட்லி, தெறி, மெர்சல், பிகில் படங...

வாடகை வீடு இனி வேண்டாம்; “ஒன் ஸ்கொயர்” தரும் ஆஃபரை பாருங்க!

Uncategorized, World News
  பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாகிறதே தவிர மற்றவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் சொந்த வீடு என்பதை சிலர் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஆனால், இந்த நிலை இனி இல்லை என்பது தான் உண்மை. ஆம், வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை பிரபல கட்டுமான நிருவனமான ரூஃப்வெஸ்ட் (Roofvest) உருவாக்கி கொடுத்திருக்கிறது. கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி குறியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டிய வில்லாக்...
பெர்லினில் நடைபெறும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறப்பு சிறுமி…

பெர்லினில் நடைபெறும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறப்பு சிறுமி…

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
  ஜெர்மனி நாட்டின் தலைநகரம் பெர்லினில் நடைபெறும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிறப்பு சிறுமி.... ஜெர்மனியில் தற்போது சிறப்பு குழந்தைகள் மற்றும் சிறப்பு இளைஞர்கள் & இளைஞிகளுக்கான "ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் வேர்ல்ட் கேம் 2023" நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் உலகத்தில் உள்ள பல நாடுகளில் இருந்து சிறப்பு குழந்தைகள், சிறப்பு இளைஞர்கள் & இளைஞிகள் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியில் கலந்துகொள்ள சென்னையை சேர்ந்த ஒரு சிறப்பு சிறுமி மற்றும் இரண்டு சிறப்பு இளைஞர்கள் என மூவர் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள சென்றனர்.  ஜூன் 20, 2023 அன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில் 25 மீட்டர் நீச்சல் போட்டியில் சென்னையில் இருந்து சென்ற 17 வயது சிறுமி பூஜா என்பவர் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற பூஜா 'Down Syndrome Trisomy 21'...
மூழ்கி கிடக்கும் டைடானிக் கப்பலை பார்க்கப்போய் 5 பேர் பலி!

மூழ்கி கிடக்கும் டைடானிக் கப்பலை பார்க்கப்போய் 5 பேர் பலி!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து ஓசன் கேட் டைட்டன் நீர்மூழ்கி புறப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் ஓசன்கேட் தலைமை நிர்வாகி உட்பட 5 பேர் இருந்தனர். ஒரு மணி நேரம் 45 வது நிமிடத்தில் நீர்மூழ்கியில் இருந்து சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடாவின் கடற்படை கடந்த 4 நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டது. நீர் மூழ்கி கப்பலில் ஆக்சிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டு இருந்த 96 மணி நேர கெடு நேற்று காளியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் அழுத்தம் கார...
3 கோடியில் உருவாகி 15 கோடியை தொட்ட “இராவண கோட்டம்” – ஸ்பெஷல் ரிப்போர்ட் by கோடங்கி

3 கோடியில் உருவாகி 15 கோடியை தொட்ட “இராவண கோட்டம்” – ஸ்பெஷல் ரிப்போர்ட் by கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  3 கோடியில் உருவாகி 15 கோடியை தொட்ட இராவண கோட்டம்! திரைக்கதை ம்ன்னன் பாக்யராஜ் மகன் சாந்தனு - கயல் ஆனந்தி ஜோடி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் உருவான படம் இராவண கோட்டம். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் கடந்த வாரம் நடை பெற்றது. தமிழக சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்கள், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து துபாய் சென்று விழாவில் கலந்து கொண்டது இதுதான் முதல் முறை. திரையுலக வரலாற்றில் இடம் பெற்ற இந்த இராவண கோட்டம் படத்திற்கான பட்ஜெட் தலை சுற்றிப் போகும் அளவுக்கு பல மடங்கு எகிறியுள்ளாது திரையுலகில் பெரும் பேசு பொருளாக மாற உள்ளது. தமிழ்கத்தின் வறண்ட நிலப்பரப்பான இராமனாதபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கருவேலங்காட்டு கதையை தொட்டு உருவாகியுள்ள இந்த இர...
ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’.. விமானத்தில் பாகன் தம்பதியை கைதட்டி வரவேற்ற பயணிகள்!

ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’.. விமானத்தில் பாகன் தம்பதியை கைதட்டி வரவேற்ற பயணிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து மும்பை சென்றனர். நேற்று மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர். விழா முடிந்ததும் அவர்கள் உடனடியாக நேற்று மாலையே மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்ப...
உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை- பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை- பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள...
உக்ரைனின் பக்முத் நகரை  கைப்பற்றிய ரஷியா!

உக்ரைனின் பக்முத் நகரை கைப்பற்றிய ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டு இருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. குறிப்பாக கிழக்கு உக்ரைனை முழுமையாக தன்வசப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. அதை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் சண்டையிட்டு வருகிறது. பக்முத் நகரில் ரஷிய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களால் அந்நகரம் முற்றிலும் அழிந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் மிக நெருக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பல மாத சண்டைக்கு பிறகு பக்முத் நகரம், ரஷியா வசம் செல்லும் நிலையில் உள்ளதாகவும், அந்நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரஷியாவின்...
தவாங் செக்டாரில் சீன ராணுவம் அத்துமீறல் – முறியடித்த இந்தியா ராணுவம்!

தவாங் செக்டாரில் சீன ராணுவம் அத்துமீறல் – முறியடித்த இந்தியா ராணுவம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீன நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் அவ்வபோதும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. 300-க்கு மேற்பட்ட வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணு...